தேனி, ஜூலை 27- மணிப்பூரில் கலவரத்தை கட் டுப்படுத்தி அமைதியை ஏற்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், பெண்களை நிர்வா ணப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்த கயவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கலவரத்தை கட் டுப்படுத்த தவறிய மாநில பாஜக அரசை பதவி நீக்கம் செய்ய வேண் டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கல்லூரி மாண விகள்,பிஎஸ்என்எல் ஊழியர்கள் போராட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கம்பம் சர்ச் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சித்திகா தலைமை வகித்தார். கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து பேசினார். மாவட்டக்குழு உறுப்பி னர் எஸ்.பன்னீர் வேல் ,ஏரியாக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டு பாஜக அர சுக்கு எதிராக தீப்பந்தத்தை ஏந்தி முழக்கமிட்டனர். ஏரியாச் செயலாளர் கே.ஆர்.லெனின் நிறைவு செய்து பேசினார். கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம் தேனியில் கிறிஸ்தவ நல் லெண்ண இயக்கம் சார்பில் 500க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மக்கள் பங் கேற்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மண்டல செயலாளர் இன்னாசி முத்து தலைமை வகித்தார் .தேனி மாவட்ட தலைவர் ஜெயக்குமார், செயலர் கிறிஸ்டோபர் ,பொருளா ளர் குமார், தாசையா உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர்.
மதுரை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை மாநகர் வடக்கு - 1 ஆம் பகுதிக்குழு சார்பில் வைத்திய நாதபுரம் மெயின் ரோட்டில் வியா ழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. வைத்தியநாதபுரம் கிளைச் செய லாளர் அங்குச்சாமி தலைமை வகித் தார். மாநகர் மாவட்ட செயலாளர் மா. கணேசன், மாநிலக்குழு உறுப்பி னர் எஸ்.கே. பொன்னுத்தாய், பகு திக்குழு செயலாளர் வி. கோட்டைச் சாமி, மாவட்டக்குழு உறுப்பினர் பி. ராதா மற்றும் மாமன்ற உறுப்பினர் டி.குமரவேல் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வை.ஸ்டாலின், ஜெ. லெனின், டி. செல்வா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பிஎஸ்என்எல் ஊழியர்கள்
மதுரை பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம்,அகில இந்திய பிஎஸ்என்எல் - டிஓடி ஓய்வூதியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப் பந்த தொழிலாளர் சங்கம் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுரை பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் சி.செல்வின் சத்தியராஜ் தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பி.ரிச்சர்ட் . ஓய்வூதியர் சங்க மாநில அமைப்பு செயலாளர் ஜி.சுந்தரராஜன், ஒப்பந்த தொழி லாளர் சங்கம் மாவட்ட செயலாளர் எம்.சித்திரைமணி ஆகியோர் கண் டன உரையாற்றினர். மாவட்டச் செய லாளர் எம். முருகேஷ் பாபு மற்றும் பலர் பங்கேற்றனர்.
திருவாடானை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருவாடானை தாலுகா குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாலுகா குழு உறுப்பினர் ஆர் பால்ராஜ் தலை மை வகித்தார். தாலுகா செயலாளர் ஜெயகாந்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். முத்துராமு ஐந்து கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் வி. பூபாலன் ஆகியோர் உரையாற்றி னர்.
கல்லூரி மாணவிகள் மனித சங்கிலி
மதுரை பாத்திமா கல்லூரி மாண விகள் மணிப்பூர் கல்லூரி வாயில் முன்பாக மனித சங்கிலி போராட்டத் தில் ஈடுபட்டனர் . இதில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டு மணிப்பூர் சம்பவத்திற்கு எதிரான பதாகைகளை ஏந்தி பங்கேற்றனர்.
மாணவர் சங்கம்
மதுரை காமராசர் பல்கலைக்கழ கம் முன்பு மாணவர் சங்க பல்க லைக்கழக கிளை ஒருங்கிணைப்பா ளர் அனுசியா தலைமையில் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் க.பிருந்தா, ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் க.தமிழரசன் ஆகியோர் பேசினர். திண்டுக்கல் ஆத்தூர் வட்டாரம் சித்தரேவு டோல்கேட் பேருந்து நிறுத் தம் அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுகு வர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆத் தூர் வட்டார தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார்.