திண்டுக்கல், டிச.30- திண்டுக்கல் மாவட்டம் சவேரியார் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடி யிருப்போருக்கு குடிமனைப் பட்டா கோரி வெள்ளியன்று திண்டுக்கல் கிழக்கு வட் டாட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக குடியே றும் போராட்டம் நடை பெற்றது. இந்த போராட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டக்குழு உறுப்பினர் ஆசாத், நக ரச்செயலாளர் அரபுமுக மது, வாலிபர் சங்க தலை வர் அஜீத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வட்டாட்சியர் கீதாவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை யின் அடிப்படையில் வருகிற 27 ஆம் தேதி முதல்வர் வருகையில் போது 250 தகுதி வாய்ந்தவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து 5 ஆவது முறையாக இந்த போராட்டம் நடைபெற்றது. வட்டாட்சியர் அளித்த உறுதி யால் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.