திருவில்லிபுத்தூர், ஆக.10- கிருஷ்ணன் கோவில் முதல் ராஜபாளையம் அமிழ் ஹோட்டல் வரை மதுரை -தென்காசி தேசிய நெடுஞ் சாலையை சீரமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் திரு வில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் பகுதியில் நூதனப் போராட்டம் நடைபெற்றது. நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு நடை பெற்ற போராட்டத்திற்கு கட்சியின் நகர்க்குழு உறுப்பினர் பிரபு தலைமை தாங்கினார். மாவட்டச் செய லாளர் கே. அர்ஜுணன் , மாவட்டக்குழு உறுப்பினர் ஜோதிலட்சுமி, நகரச் செய லாளர் ஜெயக்குமார் ஆகி யோர் பேசினர். நகர்க்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் . கிருஷ்ணன்கோவில் பேருந்து நிலையம் அரு கில் கிளைச் செயலாளர் செல்லச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஒன்றிய செயலாளர் சசிகுமார். மாற்றுத்திற னாளிகள் சங்க மாவட்ட செய லாளர் நாகராஜன் பேசினர் . மாவட்ட செயலாளர் கே அர்ஜுணன் நிறைவுரை யாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் திருமலை, ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் பால்சாமி, பெருமாள் மற்றும் பலர் கலந்து கொண் டனர்.