மதுரை, ஜூன் 18- மதுரை பெத்தானியாபுரம் என்.எஸ்.கே.வீதி, பாத்திமாநகர் பகுதிகளில் பல மாதங்களாக பாதாளச் சாக்கடை கழிவுநீர் தெருக்களில் ஆறாக ஓடுகிறது பாத்திமா நகர் இரண்டாவது தெருவில் பாதாளச் சாக்கடை கழிவு நீருக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். மாநகராட்சி நிர்வாகம் சாக் கடை அடைப்பு ஏற்படும்போது வந்து சுத்தம் செய்கிறது. இரண்டு தினங்களில் மீண்டும் கழிவுநீர் வெளியேறத் தொடங்கி விடுகிறது. வீடுகளுக்குள்ளும், தெருப்பகுதிகளிலும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. குடிநீருடன் கழிவுநீரும் கலந்து வருவதால் குடிநீரையும் பயன்படுத்த முடியவில்லை. பாத்திமா நகர் இரண்டாவது தெருவில் இந்தத் துயரத்தை தொடர்ந்து அனுபவித்து வரும் வி.செல்வி கூறுகையில், அதி காரிகளிடம் புகார் கூறினால் உடனே ஊழியர்கள் வந்து “படம் காட்டி”விட்டுச் செல்கின்ற னர். மறு நாளே கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எத் தனை முறைதான் ஆணையரி டமும், பொறியாளரிடமும் பேசு வது எனத் தெரியவில்லை. புதிய ஆணையராவது இப்பிரச்ச னைக்குத் தீர்வு காணவேண்டு மென்றார் இப்பகுதிகளில் பேவர் பிளாக் கற்கள் பதிப்பது மற்றும் சாலைகள் போடும் பொழுது பழைய சாலைகளை தோண்டி எடுத்துவிட்டு போடுவதில்லை இதனால் பாதாள சாக்கடை செல்லும் கழிவுநீர் குழாய்கள் வீடுகளை விட உயரமாக உள்ளது. தற்போதுள்ள கட்டு மானத்திற்கு ஏற்றவாறு பாதாள சாக்கடை கழிவு நீர் குழாயை பதிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றனர் பகுதி மக்கள். என்.எஸ்.கே.வீதி, எஸ்.எம்.ஆர்.தோப்பு பகுதிகளில் பல மாதங்களாக பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறி வரு கிறது. மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கூறி னால் நடவடிக்கை எடுப்ப தில்லை. மழைக்காலம் தொடங்கி விட்டால் மக்கள் சிரமத்தை சந்திக்க நேரிடும். பாதாள சாக்கடைகளை முறை யாக பராமரிக்க உடனே நட வடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.