இராமநாதபுரம், அக்.12- இராமநாதபுரம் மாவட் டம் ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் விவசாய நிலத்தை நாசப்படுத்தும் காட்டு மாடுகளை கட்டுப் படுத்த கோரி தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா தலைவர் சகாதே வன் தலைமை வகித்தார். கார்த்திகை சாமி, தங்கராசு, எம்.காந்தி கிருஷ்ணன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எம். முத்துராமு, மாவட்டச் செய லாளர் வி.மயில்வாகனன், சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.ஏ.சந்தானம், தாலுகா செயலாளர் ஏ.செந்தில் குமார் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், ஆர்எஸ் மங்கலத்தில் செயல் பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும், போது மான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமனம் செய்ய வேண்டும், சேத்தி டல் மற்றும் முத்துப்பட்டினம் கிராமத்தில் உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிட வேண்டும், காட்டு மாடுக ளால் பாதிக்கப்பட்ட சேத்தி டல், சிறுகுடி, வரவணி, முத்துப்பட்டணம் உள்ளிட்ட கிராமங்களுக்கு பாதிக்கப் பட்ட விவசாயிகள் அனை வருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டன. மேலும் தாலுகாவில் பேருந்து வசதி இல்லாத கிராமங்களுக்கு உடனடி யாக பேருந்துகள் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாய சங்க மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிராம தலைவர்கள் மனு அளித்தனர். நடவ டிக்கை எடுப்பதாக அதிகாரி கள் உறுதி அளித்தனர்.