திண்டுக்கல், ஆக.27- திண்டுக்கல் மாவட்டத்தில் வேளாண் பயிர்களை நாசம் செய்யும் வன விலங்கு களை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசும் மாவட்ட நிர்வாகமும் முன்வரவேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கடந்த வெள்ளி யன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம். ராமசாமி பேசுகையில், ‘‘திண்டுக்கல் மாவட் டத்தில் கீரனூர், அக்கறைப்பட்டி, மானூர் உள்ளிட்ட பல கிராமங்களில் மக்காச்சோளம், கரும்பு, வாழை, தென்னை போன்ற பயிர் கள் விளைவிக்கப்பட்டுள்ளன. இந்த பயிர்களை பன்றிகள் இரவு நேரத்தில் வந்து அழிக்கின்றன. இதே போல் பழைய ஆயக்குடி, கணக் கன்பட்டி, கோம்பைப்பட்டி பகுதிகளில் காட் டெருமை, யானை ஆகிய விலங்குகள் வந்து விளைபொருட்களை நாசம் செய்கின்றன. பல நேரங்களில் விவசாயிகளை அச்சுறுத்து வதும், கனகராஜ் என்ற விவசாயி காட்டெ ருமை தாக்கி படுகாயமுற்றார். இது தொடர்பாக கோட்டாட்சியர் மற்றும் ஆட்சியர் ஆகியோரிடம் புகார் மனு கொடுத்தும் வன விலங்குகளை கட்டுப் படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே நிலை தொடர்ந்தால் விவசாயிகள் வேளாண் பயிர்கள் முற்றிலும் சேதமுற வாய்ப்புள்ளது.
விவசாயிகள் பல லட்சம் கடன் பெற்று தொழில் செய்வதால் இந்த விலங்குகளால் பெருத்த நஷ்டம் அடைகிறார்கள். எனவே வனத்துறை அதிகாரிகள் மற்றும் வரு வாய்த்துறை அதிகாரிகள் விலங்குகளை கட்டுப்படுத்த வேண்டும். கேரள மாநில அரசாங்கத்தை போல வன விலங்கு களை கட்டுப்படுத்த திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் முன்வர வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழு இழப்பீடு வழங்கவும், விலங்குகளால் தாக்குதலுக்குள்ளான விவசாயிக்கு நிவாரணம், சிகிச்சைக்கான செலவுகளை அரசே ஏற்க வேண்டும். விருவீடு பகுதியில் வைகை 58ம் கால் வாய் தொட்டி பாலம் அருகே வெடிமருந்து தொழிற்சாலை மற்றும் 13 ஏக்கரில் கல்குவா ரிகளை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். இதன் மூலம் தொட்டி பாலத்தை பாதுகாத்து விவசாயிகளின் வேளாண் தொழிலை பாதுகாக்க வேண்டும்’’ என்று கூறினார். இதற்கு பதில் அளித்த ஆட்சியர் பூங்கொடி, ‘‘தற்போது 58ம் கால்வாய் பகுதி யில் வெடிமருந்து தொழிற்சாலை இயங் கக்கூடாது என்று தற்காலிகமாக தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அதனை நிரந்த ரமாக மூடுவதற்கு நடவடிக்கை மேற் கொள்வோம்’’ என்று தெரிவித்தார். விவசாயிகள் சங்க மாவட்டத் தலை வர் என்.பெருமாள் பேசுகையில், ‘‘விவசாயி களுக்கு வழங்கக்கூடிய மும்முனை மின்சா ரம் தடைபட்டு, தடைபட்டு வருகிறது. எனவே விவசாயிகளுக்கு வழங்கப்படும் மின்சார விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும். அதற்கான கால நிர்ணயம் செய்திட வேண்டும். மாமரத்தில் வெள்ளை ஒட்டுண்ணி உள்ளிட்ட பல நோய்கள் தாக்கு தல் காரணமாக விவசாயிகள் கடும் பாதிப் புக்குள்ளாகி உள்ளனர். எனவே இது தொடர்பாக உரிய மருந்து கள் அடித்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதற்காக விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்த வேண்டும். மேலும் தொப்பம்பட்டியில் உள்ள அரளிகுத்து குளத்தை தூர்வாரி, வாய்க்கால் வரத்து களை சரி செய்து விவசாயத்திற்கான பயன் பாட்டுக்கு மேம்படுத்த வேண்டும், இதே போல் அய்யலூரில் உள்ள திம்மினி குளம் மற்றும் அப்பகுதியில் உள்ள தனியார் கட்டுப்பாட்டில் உள்ள குளங்களையும் சீர் செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர்வரத்துகளை சரி செய்து தர வேண்டும்’’ என்று கூறினார். கூட்டத்தில் விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த சவடமுத்து, வெள்ளைக்கண்ணன், பாண்டியராஜன், ராஜேந்திரன், தங்கவேல். உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். (நநி)