districts

விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தை இயக்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம்

விருதுநகர், ஜூலை 21- விருதுநகரில் புதிய பேருந்து நிலையத்தை இயக்குவது குறித்து அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சரியான முடிவு ஏதும் எட்டப்படவில்லை. விருதுநகரில் புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. கட்டி முடிக்கப்பட்ட சில மாதங்கள் சரியாக இயங்கியது இப்பேருந்து நிலையம். பின்பு, இரு பேருந்து நிலை யங்களுக்கும் அனைத்து பேருந்துகளும் வந்து செல்லும் என மாவட்ட நிர்வாகம் தவறான முடிவை எடுத்தது. இதையடுத்து, புதிய பேருந்து நிலையம் காட்சிப் பொருளாக மாறிப் போனது. அருகில் உள்ள மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் புதிய பேருந்து நிலையங்கள் சிறப்பாக இயங்கி வரும் நிலையில், விருதுநகரில் மட்டும் புதிய பேருந்து நிலையமானது முதியோர்கள் நடைபயிற்சி செய்யும் இடமாக மாறிப்  போனது. குறிப்பாக திருநெல்வேலி, நாகர்கோவில், கோவில்பட்டி ஆகிய ஊர்களில் இருநது இயக்கப்படும் பேருந்துகள் தற்போது விருதுநகரையே புறக்கணித்து வருகின்றன. விருதுநகருக்கு பேருந்து செல்லாது என  நடத்துநர்களே கூறி பயணிகளை ஏற்றாமல் செல்லும் நிலை தற்போது வரை தொடர்கிறது. பைபாஸ் ரைடர் பேருந்துகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மட்டுமே நின்று செல்லும். இதன் காரணமாக, நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி செல்லும் பயணி கள், தங்களது இரு சக்கர வாகனங்களை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் நிறுத்தி விட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.  எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, புதிய  பேருந்து நிலையத்தை செயல்படுத்த வேண்டுமென கடந்த ஜூன் 16 அன்று தர்ணா போராட்டம் நடத்தி யது. அதில், தென் பகுதியில் இருந்து இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் புதிய பேருந்து நிலை யத்திற்கு வந்து செல்ல வேண்டும். விருதுநகரில் இருந்து நீண்ட தூரத்திற்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. மேலும், ஆம்னி பேருந்துகளும் இங்கிருந்தே இயக்  கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தநிலையில், புதிய பேருந்து நிலையத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி தலைமையில் புதன்கிழமை ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஆமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்ன ரசு ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர்கள் பேசுகையில், தற்போது பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் நகர் பேருந்துகளை, அங்கிருந்தே இயக்கவும், அங்கி ருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் பேருந்து களை, புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்க வேண்டுமென அறிவுறுத்தினர். அதற்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்தனர். அனைத்துப் பேருந்துகளையும் ஏதாவது ஒரு பேருந்து நிலையத்திருந்து இயக்க வேண்டும் என மோசமான யோசனையை முன்வைத்த னர். மேலும், ஒரு பேருந்தில் பயணிகள் கூட்டம் அதிக மாகவும், மற்றொரு பேருந்தில் பயணிகள் இல்லாம லும் செல்ல நேரிடும் எனவும் தெரிவித்தனர். இதையடுத்து, ஆட்சியர் மற்றும் வட்டார போக்கு வரத்து அலுவலர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து  ஆலோசித்து யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இரு பேருந்து நிலையத்தையும் இயக்க வேண்டும் என அமைச்சர்கள் ஆலேசானை தெரிவித்தனர். இதனால், புதிய பேருந்து நிலையத்தை இயக்கு வது குறித்து எந்த ஓரு முடிவும் எட்டப்படாமலேயே இந்தக் கூட்டம் நிறைவு பெற்றது.