இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வியாழனன்று (ஆக.31) வாக்குச்சாவடி சீரமைப்புக்கான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை) பூவராகவன், இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.