கடமலைக்குண்டு, பிப்.7- தேனி மாவட்டம், ஆண்டிபட்டி உட் கோட்டம் மாநில நெடுஞ்சாலைத்துறை மூல மாக அண்ணாநகர், கடமலைக்குண்டு ஆகிய பகுதிகளில் ரூ.1 கோடி மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி உட் கோட்ட மாநில நெடுஞ்சாலைதுறை 101 ல் உள்ள அண்ணாநகர், டாணா தோட்டம், கொம்புக்காரன்புலியூர், கடமலைக் குண்டு, மயிலாடும்பாறை ஆகிய பகுதியில் உள்ள சாலைகள் குடிநீர் பைப்லையன் பதிப்பதற்காக பெரும்பாலான பகுதியில் சேதம் அடைந்தும், குண்டும் குழியுமாக இருந்தது. இதனால் வாகனங்களில் செல் லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இதனை தொடர்ந்து தார்சாலை யை புதுப்பிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை விடுத்தனர் . இதனை தொடர்ந்து ரூ. 1 கோடி மதிப்பில் மாநில நெடுஞ்சாலைத்துறை 101 ல் உள்ள அண் ணாநகர், ஆத்தங்கரைப்பட்டி, கொம்புக்கா ரன் புலியூர் ,தேவராஜ் நகர், கடமலைக் குண்டு, கரட்டுப்பட்டி, தென்பழனி காலனி, மயிலாடும்பாறை ஆகிய பகுதிகளில் தார்ச் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணியினை நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் ரமேஷ் மேற் பார்வையில் உதவி கோட்ட பொறியாளர் திருக்குமரன் உதவி பொறியாளர் முத்து ராமன் ஆய்வு செய்து வருகின்றனர்.