சென்னை, ஜூலை 13 - திறந்தவெளி பல்கலைக்கழகத் தில் தொலைதூர கல்வி பயிலும் மாணவர்களுக்கு இறுதி பருவ தேர்வை ஆகஸ்ட் மாதத்தில் நடத்த வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. ஏழை, எளிய மாணவர்கள் பயில்வதற்காக பிரத்யேகமான முறையில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வியை நடத்தி வருகிறது. 2021-23 கல்வியாண்டில் பயிலும் இளங்கலை மாணவர்களுக்கான இறுதி பருவ தேர்வு ஜூலை மாதம் நடத்த வேண்டும். மாறாக, செப்டம் பர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாடு முழுவதும் தொலைதூர கல்வி முறையில் பயிலும் நூற்றுக்கணக்கான மாண வர்களின் கல்வி பாதிக்கப்பட் டுள்ளது. இறுதி பருவ தேர்வை கால தாமதமாக நடத்துவதால், முதுகலை படிப்பில் சேரும் வாய்ப்பு தடைப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் ஓராண்டு உயர் கல்வி கற்க முடியாத சூழல் உருவாகி உள்ளது. எனவே, இறுதி பருவ தேர்வை ஆகஸ்ட் மாதமே நடத்தி, குறுகிய காலத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தேர்வு கட்டுப்பாட்டாளர் பதில் இது தொடர்பாக, பல்கலைக் கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் முனை வர் எம்.மணிவண்ணனை சந்தித்து, சங்கத்தின் தென் சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.ஆனந்த் வியாழனன்று (ஜூலை 13) மனு அளித்து பேசினார். இதனை தொடர்ந்து செய்தி யாளர்களிடம் பேசிய ஆனந்த், “துணைவேந்தருடன் கலந்தாலோ சித்து நல்ல முடிவை ஓரிரு நாட்க ளில் தெரிவிப்பதாக தேர்வு கட்டுப் பாட்டாளர் உறுதி அளித்துள்ளார்” என்றார். இந்நிகழ்வின் போது மாவட்ட நிர்வாகிகள் சதீஷ், தமிழச் செல்வன், சுவேதா, கமலேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.