அருமனை, நவ.30 - கன்னியாகுமரி மாவட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அருமனை வட்டாரம் குழிச்சல் கிளை உறுப்பினர் சுஜின்குமார் (41) அகால மரணம் அடைந்தார். உடல்நலக்குறைவால் திரு வனந்தபுரம் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த சுஜின் குமார் புதனன்று (நவ.29) இரவு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்தார். அன்னாரது மறைவுச் செய்தியறிந்து சிஐடியு .மாவட்டத் தலைவர் பி.சிங்காரன், சிபிஎம் அருமனை வட்டார செயலாளர் சி. சசிகுமார், பாகோடு பேரூராட்சி தலைவர் ஜெயராஜ், அருமனை பேரூராட்சி தலைவர் லெதிகா மேரி,கட்சியின் வட்டாரக்குழு உறுப்பினர்கள், பேருராட்சி உறுப்பினர்கள் உட்பட ஏராளமா னோர் அஞ்சலி செலுத்திர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர். லீமாறோஸ், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர். செல்லசுவாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர். இறுதி நிகழ்ச்சி வியாழனன்று மாலை நடை பெற்றது. இவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.