districts

img

பாகோடு தோழர் றசல்ராஜ் நினைவு தினம்

அருமனை,அக். 27 கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் வட்டாரம் பாகோடு பேரூராட்சி முன்னாள் தலைவர்                      தோழர் ரசல் ராஜ் 9-ஆவது நினை வையொட்டி அவரது நினை விடத்தில் மலர் வளையம்  வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.நினைவு ஸ்தூபியில் மூத்த தோழர் தங்கப்பன் கொடியேற்றி வைக்க தோழர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.  அன்னாரது நினைவையொட்டி நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற சகோதரர் மணி கண்டனுக்கு நினைவுக் கோப்பை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.லீமா றோஸ் வழங்கினார். வட்டா ரக்குழு செயலாளர் ஆர்.ஜெயராஜ் தலைமை தாங்கினார். அருமனை வட்டாரக்குழு செயலாளர் சசி குமார், மேல்புறம் வட்டாரக்குழு உறுப்பி னர்கள்  ஹென்றி , கிறிஸ்து தாஸ், கிறிஸ்டோபர், சுரேஷ் குமார், அண்டு கோடு கூட்டுறவு சங்கத் தலைவர் அனூப், கேதரின் எஸ்தர் டானி, பரி மளா பாய்,இருதய ராஜ் , வாலிர் சங்க மாவட்ட செயலாளர் எட்வின் பிரைட் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;