திண்டுக்கல், மார்ச் 6- சாணார்பட்டி அருகே சொத்து தகராறு காரண மாக தோழர் தமயந்தியை உறவினர்கள் பேருந்தில் படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடினர். இதனைய டுத்து சம்பவ இடத்தில் மாவட் டக் காவல்துறைக் கண்கா ணிப்பாளர் எஸ்.பி.பாஸ்க ரன் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி கணவாய்பட்டி யைச் சேர்ந்தவர் தமயந்தி (45). இவரது கணவர் கோபி திண்டுக்கல்லில் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவர் களுக்கு 2 மகன்கள் உள்ள னர். கணவாய்பட்டியில் தம யந்தியின் கணவர் கோபி யின் அண்ணன் ராஜாங்கம் ஆகியோரிடையே சொத்து தகராறு இருந்து வந்துள் ளது. இது தொடர்பாக சாணார்பட்டி காவல்நிலை யத்தில் புகார் கொடுக்கப்பட் டது. அதன் பின்னர் திண் டுக்கல் நீதிமன்றத்தில் வழக் கும் நடைபெற்று வருகிறது. தோழர் தமயந்தி திண் டுக்கல் சக்தி தப்பாட்ட கலைக்குழுவில் செயலாற்றி யவர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் உறுப்பின ராக உள்ளார். மாதர் சங் கத்தில் முன்னணி தலைவ ராகவும் செயல்பட்டுள்ளார். இவ்வழக்கின் தீர்ப்பு வியா ழனன்று வெளிவர இருந்த நிலையில் தீர்ப்பை தெரிந்து கொள்வதற்காக கணவாய் பட்டியிலிருந்து திண்டுக்கல் வரும் தனியார் பேருந்தில் முன் சீட்டில் அமர்ந்து வந் துள்ளார்.
கணவர் கோபியின் அண்ணன் ராஜாங்கமும், அவரது மகன் தேவா ஆகி யோர் தமயந்தியை அதே பேருந்தில் பின்தொடர்ந்து வந்துள்ளனர். பேருந்து கோபால்பட்டி அருகே வடுக பட்டி பிரிவில் வந்த போது ராஜாங்கமும் அவரது மக னும் தாங்கள் மறைத்து வைத் திருந்த கொடுர ஆயுதங்க ளைக் கொண்டு பேருந்துக் குள்ளே தமயந்தியை கழுத் தறுத்துக் கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். சாணார்பட்டி போலீசார் உடனடியாக சம்பவ இடத் திற்கு சென்று பார்வையிட்ட னர். மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நேரில் ஆய்வு செய்து விசா ரணை மேற்கொண்டார். தமயந்தியின் கணவர் கோபி யும் சம்பவ இடத்திற்கு வந் தார். அவரிடமும் எஸ்.பி.பாஸ் கரன் விசாரணை செய்தார். பின்னர் தமயந்தியின் உடல் உடற்கூராய்வுக்காக திண் டுக்கல் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை கொண்டுவரப்பட்டது. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னர் கே.பாலபாரதி, மாநிலக் குழு உறுப்பினர் என். பாண்டி, மாவட்டச்செயலா ளர் ஆர்.சச்சிதானந்தம் உள்ளிட்ட தலைவர்கள் திண்டுக்கல் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனைக்கு சென்று தமயந்தி யின் உறவினர்களை சந் தித்து ஆறுதல் கூறினர். (நநி)