திண்டுக்கல், டிச.17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மூத்த தலைவர் தோழர் பாப்பா உமாநாத்தின் 12 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங் கம் சார்பாக சனிக்கிழமை யன்று அஞ்சலி நிகழ்ச்சி நடை பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத்தலைவர் சுமதி தலைமை வகித்தார். பாப்பா உமாநாத் உருவப்படத் திற்கு மலர் தூவி அஞ்சலி மரி யாதை செலுத்தினர். திண் டுக்கல் பேருந்து நிலையத்தி லும் அஞ்சலி செலுத்தப் பட்டது. சாணார்பட்டி ஒன்றியம் கோபால்பட்டியில் அவரது உருவப்படத்திற்கு மாலை யணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தவசி மடை, இந்திரா நகர், மேட் டுக்கடை, சாணார்பட்டி, ஆகிய பகுதிகளிலும் நடை பெற்றது. இதில் மாதர் சங்க ஒன்றிய தலைவர் ஈஸ்வரி, ஒன்றிய செயலாளர் பாப் பாத்தி, ஒன்றிய பொருளா ளர் பழனியம்மாள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண் டனர். ஆயக்குடியில் நடை பெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் மாத சங்க ஒன்றிய செயலா ளர் ஜி.கௌரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.