நாகர்கோவில், நவ.17- ராஜாக்கமங்கலம் தென்னை உற்பத்தி நிலையத்தில் உள்ள முறை கேடுகளை கண்டு பிடித்து சம்பந் தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுப்பது டன் பொதுக்குழு கூட்டத்தை நடத்த அனுமதிக்க வேண்டும் என விவசாயி கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். கன்னியாகுமரி மாவட்ட விவசா யிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தலை மையில் வியாழனன்று (நவ.17) நடை பெற்றது. விவசாயிகள் மற்றும் விவசா யிகள் சங்கங்களின் நிர்வாகிகள் மழையால் ஏற்பட்டுள்ள பயிர் நாசத்து க்கு இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி பேசினர். இதற்கு பதிலளித்த வேளாண்மை இணை இயக்குநர், அனைத்து விவசாயிக ளும் வேளாண் காப்பீடு திட்டத்தில் இணைந்து பயன்பெறும்படி கேட்டுக் கொண்டார். மேலும் நெல் பயிருக்கு காப்பீடு செய்திட 15.12.2022 கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் விவசாயிகள் கூறுகை யில், விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் வழங்கப்பட வில்லை. இருப்பு விலை குறித்து விவரங்கள் கடை களில் வைக்கப்பட வில்லை. அதிக விலைக்கு உரங்கள் விற்கப்பட்டு வருகிறது. தோட்டக்கலை துறை மூலமாக மானியங்கள் விவசாயிக ளுக்கு வழங் கப்படவில்லை. குமரி மாவட்டத்தில் மூன்று போகம் மழை பெய்து வருகிறது. இதனால் நெல்லி னுடைய ஈரப்பதம் எப்பொழுதும் அதிக மாக தான் இருக்கும். நெல் கொள் முதல் நிலை யங்களில் 22 சதவீதத்தி ற்கு மேல் ஈரப்பதம் இருந்தால் நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால் டெல்டா மாவட்டத்தில் 22 சதவீதத்திற்கும் மேல் ஈரப்பதம் இருக்கும் நெல்லையும் கொள்முதல் செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே குமரி மாவட்டத்திலும் 22 சதவீ தத்திற்கு மேல் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜாக்கமங்கலம் தென்னை உற்பத்தி நிலையத்தில் உள்ள முறை கேடுகளை கண்டு பிடித்து சம்பந்தப் பட்டவர் மீது நடவடிக்கை எடுப்பது டன் பொதுக்குழு கூட்டத்தை நடத்த அனுமதிக்க வேண்டும். இதற்கு பதில் அளித்து அதிகாரிகள் கூறுகையில், குமரி மாவட்டத்தில் 2350 டன் உரம் இருப்பில் உள்ளது. உரம் இருப்பு மற்றும் விலை தொடர்பான பட்டியல் வைக்காத கடைக்காரர்கள் மீது நடவ டிக்கை எடுக்கப் படும். கால்நடை மருத்துவ மனைகளில் முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 1962 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் நடமாடும் ஆம்புலன்ஸ் மூலமாக சென்று அந்த கால்நடைக ளுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நெல் கொள்முதல் நிலையத்தில் 22 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப் படுவதை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.
குளங்களில் ஏற்பட்ட உடைப்பு களை சரிசெய்தல், சானல்களில் தண்ணீர் வரத்து மற்றும் குளங்களை தூர்வாருதல், நீர்நிலை பராமரித்தல் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் போன்ற குறைகள் பொதுப்பணித் துறை மூலம் சரிசெய்திட விவாதிக் கப்பட்டது. தொடர் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய பிரச்சனைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார். நீர்ப்பாசன சங்கத் தேர்தல் நடத்தும் பொருட்டு வாக்காளர் பட்டியல் அரசிதழில் வெளி யிடப்பட்டுள்ளது எனவும் ஜனவரி மாதத்தில் தேர்தல் நடத்தப்பட உள்ளது எனவும் மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலு வலர் அ.சிவப்பிரியா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சந்திரசேகரன், வேளாண்மை இணை இயக்குநர் எம்.ஹனிஜாய்சுஜாதா, நீர்வளத்துறை செயற்பொறியாளர் ராஜா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) எம்.ஆர்.வாணி, தோட்டக்கலை துணை இயக்கு நர் ஒய்.ஷீலாஜாண் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.