சின்னாளப்பட்டி, டிச.7- ஆத்தூர் ஊராட்சி ஒன்றி யம், சித்தரேவு ஊராட்சிமன்ற செயலரை உடனடியாக பணி யிட மாற்றம் செய்ய கோரி ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை புதனன்று கிராம பொதுமக்கள் முற்று கையிட்டனர். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், சித்தரேவு ஊராட்சி செய லர் சிவராஜன், இவர், ஊராட் சிப் பணிகளையும், திட்டப் பணிகளையும் செய்யாமல் ஊராட்சி நிர்வாகத்தை முடக்க காரணமாக இருந்தது அதி காரிகள் ஆய்வில் தெரிய வந்தது. சித்தரேவு ஊராட்சி பொது மக்கள் 180 பேர் தக வல் அறியும் உரிமை சட்டத் தின்கீழ் பல்வேறு தகவல்கள் கோரியிருந்தனர்.
மேற்படி தகவல்களை இதுவரை மனு தாரர்களுக்கும் அனுப்ப வில்லை. அதன் நகல்களை ஊராட்சி ஒன்றிய அலுவல கத்திற்கும் சமர்ப்பிக்க வில்லை எனவும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட வேலைகளில் பயனாளிகளின் வருகையை கண்காணிக்க தவறிவிட்டார் எனவும், பணித்தளங்களில் எண்ணிக்கையை சரிபார்க் காததால் கூடுதல் செலவி னங்கள் ஏற்பட காரணமாக இருந்தது மற்றும் 1 முதல் 9 பதிவேடுகள் ஆய்வுக்கு சமர்ப்பிக்கவில்லை, உள் ளிட்ட பல்வேறு புகார்கள் குறித்து அதிகாரியின் விசா ரணையில் தெரிய வந்துள் ளது என்று கூறப்படுகிறது. இதனால் சித்தரேவு ஊராட்சி மன்ற செயலர் சிவ ராஜன், மணலூர் ஊராட்சி மன்ற செயலராக பணியிட மாற்றம் செய்து, அதற்கான உத்தரவை கடந்த 2-ஆம் தேதி, ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஏழுமலை யான் பிறப்பித்தார். இந் நிலையில் மணலூர் ஊராட்சி மன்ற செயலராக இருந்த திருப்பதி சித்தரேவு ஊராட்சி மன்ற செயலராக பணி நிய மனம் செய்யப்பட்டார். மண லூர் ஊராட்சி மன்ற செயல ராக பணியிடம் மாற்றம் செய் யப்பட்ட சிவராஜன் போடிக் காமன்வாடி ஊராட்சி மன்ற செயலராக கூடுதல் பொறுப்பு கவனிப்பார் எனவும் அதிகாரி உத்தரவிட்டிருந்தனர். இந் நிலையில், 7-ம் தேதி வரை, சித்தரேவு ஊராட்சி செயலர் சிவராஜன் பணி இடமாறுதல் செல்லவில்லை. அவர் தொட ர்ந்து சித்தரேவு ஊராட்சி யில் பணியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சித்தரேவு ஊராட்சி மன்ற செயலர் சிவ ராஜனை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்ட, ஆத் தூர் வட்டார வளர்ச்சி அலு வலர் (கி.ஊ) ஏழுமலை யானை திடீரென, கொடைக் கானலுக்கு பணியிடமாற் றம் செய்து, மாவட்ட உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள் ளனர். இதனால், கோபம டைந்த சித்தரேவு கிராம பொதுமக்கள், சித்தரேவு ஊராட்சி செயலர் சிவராஜன் உடனடியாக பணி மாறுத லாகி செல்ல வேண்டும் என்று சித்தரேவு ஊராட்சி கிராம பொதுமக்கள் புதன்கிழமை காலை சீவல்சரகு அருகே கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு சென்று கோரிக்கை வைத்தனர். மாவட்ட ஆட்சியர் விசாகனி டமும் இதே கோரிக்கையை வலியுறுத்தினர். பின்னர், ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் தட்சிணா மூர்த்தியிடம் சென்ற பொது மக்கள் ஊராட்சி மன்ற அலு வலகத்தில் திடீர் முற்றுகை யிட்டு ஊராட்சி சிவராஜனை உடனடியாக பணி மாறுதல் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதிகாரி தட்சிணா மூர்த்தி கூறுகையில், பொது மக்களின் கோரிக்கைகள் நிறை வேற்றப்படும் என்றார். நிறைவேற்றவில்லை என்றால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடு வோம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.