districts

img

சிறிய மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை வாங்க மறுப்பதாக புகார்

ஈரோடு, டிச.19- ஈரோடு மாவட்டத்தில் சிறிய மதிப்பிலான ரூ1, 2 நோட்டு களையும், பத்து, இருபது ரூபாய் நாணயங்களை வங்கி, வர்த்த கர்கள், நடத்துநர்கள் வாங்க  மறுப்பதாக குற்றஞ்சாட்டி மாவட்ட ஆட்சியரிடம் முதியவர் ஒருவர் ரூபாய் நோட்டுகளுடன் புகார் அளிக்க வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து காந்தியவாதி மணிக்கண்ணன் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது, ஈரோடு மாவட்டம் முழுவதும் பேருந்துகள், சிற்றுந்துகள், ஆட்டோக்கள், சிற்றுந்துகள், பெரிய வியாபாரிகள், சிறுகுறு வியாபாரிகள் சிறிய மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களை வாங்க மறுக்கின் றனர்.  சேமித்த பணத்தை செலவு செய்ய முடியாமம் தவிப் பதாகவும், இதுகுறித்து மாவட்டம் முழுவதும் பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் மூலம் மாவட்ட நிர்வாகம் விழிப் புணர்வு விளம்பரம் செய்ய வேண்டும். இந்திய அரசு அச்ச டித்த நோட்டுகளை வாங்க மறுப்பவர்கள் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தார்.