தேனி மாவட்டடத்தில் 9 மதுக்கடைகள் மூடல்
தேனி, ஜூன் 21- தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு உத்தரவுப்படி 9 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படுகின்றன. தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று கடந்த சட்டசபை கூட்டத் தொடரின் போது மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அறிவிப்பு வெளியிட்டார். அதுதொடர் பான நடவடிக்கையாக புதன்கிழமை தமிழக அரசு அர சாணை வெளியிட்டது. கோவில்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் அருகில் செயல் பட்டு வந்த டாஸ்மாக் கடைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு மதுக்கடைகள் கணக்கெடுக்கப்பட்டது. இதன்படி தேனி மாவட்டத்தில் 8510,8552,8564,8611,8636,8575,8615,8533 ஆகிய எண்கள் கொண்ட கடைகள் வியா ழனன்று முதல் மூடப்பட உள்ளன.
தேவாரம் வாலிபருக்கு கொலை வழக்கில் ஆயுள் தேனி நீதிமன்றம் தீர்ப்பு
தேனி, ஜூன் 21- கடந்த 2015 ஆம் ஆண்டு தேவாரத்தில் நடைபெற்ற கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்ப ளித்தார். தேவாரம் திடீர் புரத்தை சேர்ந்தவர் ரெங்கசாமி மகன் செல்லப்பாண்டி.இவர் அதே பகுதியை சேர்ந்த காளி முத்து என்பவரின் மனைவியுடன் பழகி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காளிமுத்து ,செல்லப்பாண்டி யை பெரியதேவி குளத்திற்கு மது அருந்த அழைத்து சென்று, கட்டையால் தலையில் தாக்கி ,தண்ணீரில் மூழ்க டித்து சென்றுவிட்டார் .தகவலறிந்த செல்லப்பாண்டியின் தாயார் செல்லத்தாய் ,உயிருக்கு போராடிய மகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார் .அப்போது வரும் வழியில் இறந்து விட்டார் .இதுகுறித்து செல்லத் தாய் கொடுத்த புகாரின் பேரில் தேவாரம் காவல் ஆய்வா ளர் பிலிப் கென்னடி வழக்கு பதிவு செய்து காளிமுத்து வை கைது செய்து சிறையில் அடைத்தார். இது தொடர்பான வழக்கின் விசாரணை தேனி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது .இந்நிலை யில் புதன்கிழமை வழக்கு விசாரணையை முடித்து வைத்த நீதிபதி எஸ்.கோபிநாதன் ,குற்றவாளி காளிமுத்துவிற்கு ஆயுள் தண்டனையும்,ரூ 1000 அபராதமும் விதித்து தீர்ப்ப ளித்தார்.
குடி போதையில் தகராறு விருதுநகர் அருகே ஒருவர் கொலை
விருதுநகர், ஜூன் 21- விருதுநகரில் 17 வயது சிறுவனின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். விருதுநகர் அருகே உள்ளது ரோசல்பட்டி ஊராட்சி. இங்குள்ள அண்ணா நகரைச் சேர்ந்த இராமலட்சுமி என்ப வர் மகன் முத்துப்பாண்டி (17). இவர் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவர், அதே பகுதியைச் சேர்ந்த அஜீத்(25),செல்லம், தனுஷ் ஆகியோருடன் சேர்ந்து ரோசல்பட்டி ஜக்கம்மாள் கோவில் பின்பகுதியில் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது குடி போதை யில் நண்பர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது முத்துப்பாண்டியை தாக்கியதோடு, கத்தியால் கழுத்தை அறுத்துள்ளனர். இதில் அவர் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார் முத்துப்பாண்டியன் உடலை கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். தாயார் ராமலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ஊரக காவல்துறையினர் வழக்குப் பதிந்து அஜீத்தை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
போதை மாத்திரை விற்பனை ஆண்டிபட்டியில் வாலிபர் கைது
தேனி, ஜூன் 21- ஆண்டிபட்டியில் அரசால் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறை யினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி குமாரபுரம் சுடுகாடு அருகே ஒருவர் போதை மாத்திரைகளை பயன்படுத்தி அதனை விற்பனை செய்து வருவதாக ஆண்டிபட்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது .அதன்பேரில் சார்பு ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமையிலான காவ லர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆண்டி பட்டி, ஆசாரி தெருவை சேர்ந்த குருசாமி என்பவரின் மகன் சந்தானமூர்த்தி(25) என்பவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் அரசால் தடை செய்யப்பட்ட டேபண்ட டோல் மாத்திரைகள், நைட்ரஸெபம் மாத்திரைகள் நைட்ரோசன், நைட்ராசெபம் மாத்திரைகள் நைட்ரேவெட் போன்ற மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் இந்த மாத்திரைகளை மதுரை யில் பெயர், விலாசம் தெரியாத நபரிடம் வாங்கி பயன் படுத்தி விற்பனை செய்து வருவதாக போலீசாரிடம் தெரி வித்துள்ளார். சந்தானமூர்த்தியை கைது செய்து சிறை யில் அடைத்தனர்.
காங்கிரஸ் எம்பி குறித்து ஆபாச பதிவு தேனியில் பாஜக நிர்வாகி மீது புகார்
தேனி, ஜூன் 21- நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் குறித்து சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக பதிவிட்ட பாஜக நிர்வாகி சுரேஷ் என்பவர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் காங்கிரஸ் தலை வர்கள் புகார் அளித்தனர்.. காங்கிரஸ் கட்சியின் வர்த்தகர் பிரிவு மாவட்ட தலைவர் எஸ்.சங்கரநாராயணன் உள்ளிட்ட நிர்வாகி கள் இந்த புகாரினை அளித்தனர். அதில், பாஜகவைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்தை சமூக வலைதளத்தில் கேவலமான வார்த்தைகளில் விமர்சனம் செய துள்ளதாகவும் ,அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
வாலிபர் தற்கொலை
தேனி, ஜூன் 21- ஆண்டிபட்டி அருகே புள்ளிமான்கோம்பை கிராமத்தை சேர்ந்த சுந்தரமகாலிங்கம் என்பவர் மகன் சிவா(32). கடந்த 5 ஆண்டுகளாக சிவா மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி, அதனால் வயிற்று வலி ஏற்பட்டு அவதியடைந்து வந்ததாக தெரி கிறது. வயிற்று வலிக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாக வில்லை. இதனால் கடந்த 16 ஆம் தேதி அவரது தோட்டத்தில் விஷத்தை குடித்து மயங்கி கிடந்ததாக கூறப்படுகிறது. அவருடைய உற வினர்கள் சிவாவை தேனி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர் சிகிச்சையில் இருந்த சிவா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஆண்டிபட்டி காவல்நிலை யத்தில் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்ற னர்.