districts

img

ஊராட்சியில் முறைகேடாக பணம் வசூல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

உடுமலை, பிப்.7- குடிநீர் இணைப்பு வழங்க முறைகேடாக பொதுமக்களி டம் பணம் வசூல் செய்யும் ஊராட்சி நிர்வாகத்தின் மீது நடவ டிக்கை எடுக்க கோரி 7 ஆம் தேதி செவ்வாய்கிழமை இந்திய  கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்ணமநாயக்கனூர் ஊராட்சி மன்ற அலுவகத்தின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் உடுமலை தாலுகா கண்ணம நாயக்கனூர் ஊராட்சியில் குடிநீர் இணைப்பு தர பொதுமக்க ளிடம் கூடுதல் கட்டணம் வாங்கிய ஊராட்சி நிர்வாகத்தின் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முறையாக குடிநீர்  வழங்காமல் இருப்பதால் கடுமையான குடிநீர் பற்றாக்குறை  நிலவுகிறது. மருள்பட்டி செல்லும் வழியில் உள்ள இரயில்  பாலத்தில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற வேண்டும். கண்டி யகவுண்டர்புதூர் பகுதியில் உள்ள அரசு நீர் குட்டையில் ஊராட்சி பகுதியில் உள்ள குப்பைகளை கொட்டுவதை தடுக்க  வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஜெயராஜ்  தலைமை தாங்கினார். தாலுகா செயலாளர் செளந்தர்ரா ஜன், நிர்வாகிகள் சுப்பிரமணியம், ரணதேவ், கிருஷ்ணசாமி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டார்கள்.