தூத்துக்குடி, பிப்.26- தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகேயுள்ள தேமாங்குளம் கிளை சார்பில் தோழர் எஸ்.ராமசுந்தரம் நினைவை முன்னிட்டு கட்சி கொடியேற்றுதல் மற்றும் கல்வெட்டு திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிபிஎம் தேமாங்குளம் கிளை செயலாளர் ராமலிங்கம் தலைமை வகித்தார். தேமாங்குளம் ஆறுமுக நயினார் முன்னிலை வகித்தார். செல்வகுமார் வரவேற்புரையாற்றினார். தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். கிளை நிர்வாகி நாகலிங்கம் நன்றி கூறினார். இதில், மாநிலக் குழு உறுப்பினர் மல்லிகா, மாவட்டக் குழு உறுப்பினர் காசி, விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் சீனிவாசன், சிபிஎம் ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.