தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநிலக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், மறைந்த தலைவர் தே.லட்சுமணன் நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகமது, மாநில பொதுச்செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.