districts

img

கூடுதல் பேருந்துகள் இயக்கக்கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம்

விருதுநகர், ஜன-11 சாத்தூர் அருகே மேட்ட மலையில் அரசு கல்லூரி உள்ளது. இந்த நிலையில்,கூடுதல் பேருந்து வசதி செய்து தர வேண்டும். அரசு நிர்ணயித்த பிடி.ஏ கட்டணத்தை விட அதிகமாக வசூல் செய்யக்கூடாது தைப்பொங்கல் விழா கல்லூரியில் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  போராட்டத்திற்கு மாணவர் சங்க மாவட்ட தலைவர் பால்பாண்டியன் தலைமை வைத்தார்.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கருப்பசாமி விளக்கி பேசினார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் கல்லூரி முதல்வர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் வரும் ஜனவரி 17 ஆம் தேதிக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என உறுதியளித்தனர். இதை யடுத்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது .இதில் பாக்கியவதி, அஞ்சலி, தங்கபாண்டியன் ,பிரகாஷ் ,தமிழினியன், ஆதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.