கடமலைக்குண்டு,ஜூன்.23- தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா நேற்று கடமலை-மயிலை ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடமலைக்குண்டு அங்கன்வாடியில் ஊட்டச்சத்து குறைபாடுடைய 6 முதல் 6 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் நிகழ்ச்சியினை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மேலும் ஊராட்சி செயலரை ஆன்லைன் மூலம் வரி செலுத்தும் வழிமுறைகளை செயல் விளக்கமாக செய்து காட்ட வைத்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை ஆகிய ஊராட்சி களில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து பார்வையிட்டார். இறுதியாக தாழையூத்து கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டு மதுரை மாவட்டத்தை இணைக்கும் மல்லபுரம் மலைச்சாலையை பார்வை யிட்டார். அப்போது சாலையை சீரமைக்க எடுக்கப் பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வுகளின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மதுமதி, கடமலை-மயிலை ஒன்றியக்குழு தலைவர் சித்ரா சுரேஷ், கடமலைக்குண்டு ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா தங்கம், ஊராட்சி செயலர் சின்னச்சாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.