districts

img

ஜூனியர் தடகளப் போட்டி: வென்றவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

விருதுநகர், செப்.9- விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்  தில் மாவட்ட தடகள சங்கம் சார்பில் ஜூனியர் தடகள  போட்டி நடைபெற்றது. போட்டியை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 336 மாணவர்கள், 173 மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன், மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரமணிமாறன், லவ்லி  ஆப்செட் உரிமையாளர் செந்தில், தடகள சங்க செயலா ளர் சிவராஜ், பொருளாளர் விவேகானந்தன் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.