districts

img

பிளஸ்-2 பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடல்

விருதுநகர், மே.16- விருதுநகர் மாவட்டத் தில் பனிரெண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் முதல் 50 இடங்களைப் பிடித்த மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஜெய சீலன் கலந்துரையாடினார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் “காபி வித் கலெக் டர்“ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 50 இடங்களைப் பிடித்த மாணவ,மாணவியர்கள் கலந்து கொண்டனர். அப்போது மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன்,  மாணவர்களின் எதிர்கால கல்வி, வேலைவாய்ப்பு பற்றிய சந்தேகங்களை விளக்கி கூறினார். மேலும், மாணவர்கள் விடாமுயற்சி, கடின உழைப்பு, தன்னம்பிக் கையுடன் செயல்பட்டால் எதையும் சாதிக்க முடியும் என தெரிவித்தார். பின்பு, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு புத்தகங்களை ஆட்சியர் வழங்கினார்.