சின்னாளபட்டி, மார்ச் 6- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை யை அடுத்த ஆவாரம்பட்டி கிராமத்தில் தமி ழக முதல்வரின் 70-ஆவது பிறந்தநாள் விழா வை முன்னிட்டு ஊர் பொதுமக்கள் மற்றும் கேபிகே.ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 9-ஆம் ஆண்டு மாநில அளவிலான கபாடிப் போட்டி யை நிலக்கோட்டை தெற்கு ஒன்றியச் செய லாளர் மணிகண்டன் துவக்கிவைத்தார். இதில் மூணாறு (கேரளம்), பாண்டிச் சேரி நாகர்கோவில், சென்னை, கோயம் புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலி ருந்து 50-க்கும் மேற்பட்ட அணிகள் பங் கேற்றன. இறுதிப் போட்டியில் மோதிய கோயம்புத்தூர் சிட்டிபோலீஸ் அணி மற்றும் சேலம் மாவட்ட சீனியர் அணிகளில் இந்திய அணியின் கபடி வீரர்கள், அம்பேஸ்வரன், சாகுல்அமீது, புரோ கபடி மும்பை அணி வீரர் மோகன், ஜெய்ப்பூர் அணி வீரர் இள வரசன், தெலுங்கு டைட்டன்ஸ் அணி வீரர் லிங்கேஸ்வரன், தமிழ்நாடு மாநில போலீஸ் அணி வீரர் மணிகண்டன், கோயம்புத்தூர் மாவட்ட போலீஸ் அணி வீரர் முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். முதலிடம் பிடித்த சேலம் மாவட்ட சீனி யர் அணிக்கு திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கரிகாலபாண்டியன் சார்பில் 60-ஆயிரம் ரொக்கப் பணம். அணைப்பட்டி ராயல் மென்ஸ்வேர் ராஜ குமரன் சார்பில் பத்தடி உயர வெற்றிக் கோப்பை வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த கோயம்புத்தூர் சிட்டி போலீஸ் அணிக்கு கிராமக் கமிட்டி கேபிகே ஸ்போர்ட்ஸ் அணியினர் சார்பில் ரூ.50ஆயி ரம் ரொக்கம் சுழற்கோப்பை வழங்கப் பட்டது. முதல் பத்து இடங்களைப் பிடித்த அணிகளுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை ரொக்கம் மற்றும் பரிசுகள், பதக்கங்கள் ஊக்கப் பரிசுகள் வழங்கினர்.