திருவில்லிபுத்தூர், ஏப்.30- விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் வைத்திய நாத சாமி கோவில் உள்ளது. திருக்கோவிலுக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வருபவர்களின் வசதிக்காக கோவிலின் அருகே கோவிலுக்கு சொந்தமான இடத்தில் நகராட்சி யால் கட்டப்பட்ட பொது கழிப்பறை தொடர்ந்து செயல்பாட் டில் இருந்து வருகிறது .இந்த கழிப்பறைக்கு இடம் கொடுத்ததோடு தொடர்ந்து மின்சார வசதியும் தண்ணீர் வசதியும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நகராட்சி மேலாளர் பாபு கூறியதாக வருவாய் ஆய்வா ளர் ஒருவர் கழிப்பறையை பூட்டி விட்டு சென்றுவிட்டார். அன்றிலிருந்து தொடர்ந்து நான்கு நாட்களாக கழிப்பறை பூட்டப்பட்டு கிடக்கிறது. இதனால் கோவிலுக்கு வரக் கூடிய பக்தர்கள் குறிப்பாக பெண்கள் கடும் அவதிக்குள் ளாகி உள்ளனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கழிப்பறை யை திறப்பதற்கு நடவடிக்கை எடுப்பதோடு கழிப்பறை யை பூட்டி சீல் வைத்த நகராட்சி அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.