districts

மதுரை முக்கிய செய்திகள்

நெல்லையில் சிறுமி பலாத்காரம் லாரி ஓட்டுநருக்கு 20 ஆண்டு சிறை

திருநெல்வேலி ,ஆக. 30-  சிறுமிபலாத்காரம் செய்யப் பட்ட வழக்கில் லாரி ஓட்டுநருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ நீதிமன்றம்  தீர்ப்பளித்தது. நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் மேல ஏர்மாள்புரம் மேற்கு தெருவை சேர்ந்த முரு கன் (34), லாரி ஓட்டுநர் . இவர் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி 17வயது சிறுமியை கடத்தி சென்று பலாத்காரம் செய்தார். இது குறித்த புகாரின் பேரில் முன்னீர்பள் ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முரு கனை கைது செய்தனர்.  நெல்லை சிறப்பு வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த பொறுப்பு நீதி பதி சுரேஷ் குமார் குற் றம்சாட்டப்பட்ட முருக னுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.  மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.3 லட்சம் நஷ்டஈடு வழங்க நீதிபதி உத்தரவிட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் உஷா ஆஜ ரானார்.

பள்ளி மாணவி செலுத்திய கட்டணம், நஷ்ட ஈடு ரூ.1.28லட்சம் வழங்க குறைதீர் ஆணையம் உத்தரவு

தூத்துக்குடி, ஆக. 30 சேவை குறைபாடு காரணமாக மாணவி செலுத்திய கட்டணம் மற்றும் நஷ்ட ஈடு வகைக்காக ரூ.1,28,500-ஐ பள்ளி நிர்வாகம் வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.  தென்காசி மாவட்டம் மேலகரத்தைச் சார்ந்த பொன்னுச்சாமி என்பவரின் மகள் திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை அருகில் உள்ள திருவிருத்தான்புளி கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பில் படிக்க ரூபாய் 93,500 ஐ கட்டணமாக செலுத்தியுள்ளார். பள்ளியில் சேர்ந்த பின்பு தங்கும் விடுதி சரியாக இல்லாததாலும், அளிக்கப்பட்ட உணவு தரமாக இல்லாததாலும், போதிய ஆசிரியைகள் இல்லாததாலும், மாணவி பள்ளியில் இருந்து விலகி சங்கரன் கோவிலிலுள்ள வேறு பள்ளியில் படிப்பைத் தொடர்ந்துள்ளார். முதலில் படித்த பள்ளிக்கு மொத்தம் 12 நாட்கள் மட்டுமே சென்றுள்ளார்.  புகார்தாரர் எதிர்மனுதாரரை அணுகி 12 நாட்கள் படித்ததற்குரிய தொகையை எடுத்து விட்டு மீதி தொகையை தருமாறு கேட்டுள்ளார். அதற்கு பள்ளி நிர்வாகம் மரியாதையின்றி பேசி திருப்பி அனுப்பி விட்டது. அதன் பின் சேரன்மகாதேவி சார் ஆட்சியர், பத்தமடை காவல் உதவி ஆய்வாளர், திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர் மற்றும் முதல்வர் தனிப்பிரிவு ஆகியவற்றிலும் புகார்தாரர் மனு கொடுத்துள்ளார். தகுந்த நிவாரணம் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான புகார்தாரர் வழக்கறிஞர் மூலம் பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்பு இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் பள்ளி நிர்வாகத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு 12 நாட்களே படிக்க செலுத்திய கட்டணம் ரூபாய் 93,500 , சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 25,000, வழக்கு செலவுத் தொகை ரூபாய் 10,000 என மொத்தம் ரூபாய் 1,28,500 ஐ இரண்டு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் இல்லையென்றால் வழக்குத் தொடர்ந்த நாள் முதல் 9% வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

நெல்லைக்கு ரயில் மூலம்  1,196 மெட்ரிக் டன் யூரியா வருகை

 திருநெல்வேலி, ஆக 30- ஆந்திராவிலிருந்து ரயில் மூலம் ஆயி ரத்து 196 மெட்ரிக் டன் யூரியா மூடைகள் நெல்லைக்கு வந்தன.  நெல்லை உட்பட 4 மாவட்ட விவசாயிகளின் உரத் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு ஆந் திர மாநிலத்திலிருந்து 1,196 மெ.டன் யூரியா ரயில் மூலம் நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானிற்கு வந் தடைந்தது.  நெல்லை மாவட்ட வேளாண் இணை இயக்குநர்கிருஷ் ணகுமார் ஆலோசனையின் பேரில் வேளாண் உதவி இயக்குநர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு)சந்திரபோஸ், இப்கோ நிறுவன விற்பனை அதிகாரி சக்திவேல் ஆகியோர் நெல்லை மாவட் டத்திற்கு 240.50 டன், தென்காசிக்கு 580.50 டன், துாத்துக்குடிக்கு265.50 டன், குமரிக்கு 110.25 டன் யூரியாஉரமூடைகளை லாரிகள் மூலம் அனுப்பி வைத்தனர்.

சுமை வாகனங்களில் பயணிகள் சவாரி நெல்லை சரகத்தில் 215 வழக்குகள் பதிவு

திருநெல்வேலி, ஆக-30 சுமை வாகனங்களில் பயணிகளை சவாரிக்கு ஏற்றிச் சென்றதாக  நெல்லை சரகத்தில் 215 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரை அருகேயுள்ள திருச்சிற் றம்பலம் கிராமத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளர்களை அண்மை யில் வயல் வேலைக்கு அழைத்துச் சென்ற சுமை ஆட்டோ கவிழ்ந்த தில் 3 பெண்கள் உயிரிழந்ததுடன், 14 பேர் காயம் அடைந்தனர். அதைத் தொடர்ந்து சுமை வாகனங்களில் பயணிகளை சவாரி ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கவும், வழக்குப் பதிந்து பறிமுதல் செய்யவும்  நெல்லை சரக டிஐஜி பா.மூர்த்தி உத்தரவிட்டார். அதன்படி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி,கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களிலும் போலீஸார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு, பயணிகளை ஏற்றி வந்த சுமை வாகனங்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.2,500 வரை அபராதம் விதித்தனர். மேலும்,  நெல்லை மாவட்டத்தில் 21 வழக்குகள், தென்காசி மாவட்டத்தில் 85 வழக்குகள், தூத்துக்குடி மாவட்டத்தில் 55 வழக்குகள், கன்னியாகுமரி மாவட்டத்தில் 54 வழக்குகள் என நெல்லை  சரகத்தில் 215 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை தொடரும் என டிஐஜி எச்சரித்துள்ளார்.

நெல்லை வழியாக செல்லும்  தாம்பரம் - நாகர்கோவில்  சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

திருநெல்வேலி, ஆக 30 பயணிகள் நெரிசல் காரணமாக நெல்லை வழியாக செல்லும்  தாம்பரம் -நாகர்கோவில் சிறப்பு ரயில்களின் சேவை, அக்டோபர் வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளது. இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-நாகர்கோவிலில் இருந்து ஞாயிறு இரவு 11.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 11.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த சிறப்பு ரயில் வரும் செப்., 1, 8, 15, 22, 29,  அக். 6, 13, 20, 27, 2., 3, 10, 17, 24 தேதிகளில் நீட்டித்து இயக்கப் படுகிறது,தாம்பரத்தில் இருந்து திங்கள் மாலை 3.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு நாகர்கோவில் செல்லும். இந்த சிறப்பு ரயில் வரும் செப்., 2, 9, 16, 23, 30, 4., 7, 14, 21, 28,  அக். 4, 11, 18, 25ம் தேதிகளில் நீட்டித்து இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டை : ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

தூத்துக்குடி, ஆக. 30 தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் e-Shram வலைதளத்தில் பதிவு செய்து புதிய மின்னணு குடும்ப அட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேறு மாநிலத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர் களில் தங்களது சொந்த மாநிலத்தில் மின்னணு குடும்ப அட்டை இல்லாத தொழிலாளர்கள் e-Shram வலைதளத்தில் பதிவு செய்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் புதிய மின்னணு அட்டை பெற்றுக் கொள்ளலாம்.  ஏற்கனவே புதிய மின்னணு அட்டை கோரி விண்ணப்பம் செய்தவர்கள் விண்ணப்பத்தின் நிலையினை இணையதளம் அல்லது சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தினை அணுகி தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நிலத்தை அளந்து கொடுக்க காலதாமதம்  வட்டாட்சியருக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் அபராதம்

தூத்துக்குடி, ஆக. 30 தூத்துக்குடி, மில்லர்புரத்தைச் சார்ந்த சக்திவேல் மகன் சுப்பிரமணியன் என்பவர் மீளவிட்டான் கிராமத்தில் உள்ள தனது நிலத்தை அளந்து காண்பித்து எல்கை மால் குறித்து தர வேண்டி தூத்துக்குடி வட்டாட்சியரிடம்  மனு வழங்கியிருந்தார். இதற்காக அவர் ரூ.4,000-ஐ கட்டணமாக செலுத்தியுள்ளார். ஆனால் சுப்பிரமணியன் நிலத்தை அளந்து காட்ட வேண்டியதற்கு கட்டணத்தை பெற்றுக் கொண்டு, அதற்கான சேவையை வழங்காமல் காலதாமதம் செய்து வந்துள்ளனர்.  இது தொடர்பான வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் தூத்துக்குடி வட்டாட்சியரின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு சேவை குறைபாட்டினை ஏற்படுத்திய காரணத்தினால், அவருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு நஷ்டஈடாக ரூ.25,0000-மும், மற்றும் வழக்கு செலவு தொகையாக ரூ.10000- மும், இந்த உத்தரவு வழங்கப்பட்ட நாளிலிருந்து 2 மாத காலத்திற்குள் புகார்தாரர் சுப்பிரமணியனுக்கு செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

தூத்துக்குடி தொழிற்சாலையில்  அமோனியா கசிவால் தீவிபத்து : ஊழியர் பலி!

தூத்துக்குடி,ஆக. 30 தூத்துக்குடியில் டாக் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4பேர் படுகாயம் அடைந்தனர்.  தூத்துக்குடி முத்தையாபுரத்தி ல் டாக் (தூத்துக்குடி அல்கலி கெமிக்கல்ஸ் & பெர்டிலைஷர்ஸ் லிமிடெட்) தொழிற்சாலை உள்ளது. இங்குள்ள அமோனியா பிளாண்டில் 100க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் வெள்ளிக்கிழமை  பிற்பகல் திடீரென வாயு கசிவு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டுள்ளது.  இந்த தீவிபத்தில் மஞ்சள்நீர்காயல், வடக்கு தெருவைச் சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன் மகன் ஹரிஹரன் (24) என்பவர் உயிரிழந்தார்.  படுகாயம் அடைந்த மேலும் 4பேர் தூத்துக்குடியில் உள்ள தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஸ்பிக், மற்றும் டாக் நிறுவன தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.  சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் செந்தில் வேல்குமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். சம்பவ இடத்தை டவுண் ஏஎஸ்பி கேல்கர் சுப்ரமண்ய பால்ச்சந்திரா நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.  அமோனியா வாயு கசிவால் தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டு ஊழியர் உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செம்பூர் காலனியில்  சமுதாய நலக்கூடம்  அமைக்க அமைச்சரிடம் கிளாங்காடு பஞ்சாயத்து தலைவர் கோரிக்கை 

தென்காசி, ஆக  30 தென்காசி மாவட்டம், செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கிளாங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட செம்பூர் காலனி பகுதியில் சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும் என்று கிளாங்காடு ஊராட்சி மன்ற தலைவர் கொ.சந்திரசேகரன் தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், செங்கோட்டை ஒன்றியம், கிளாங்காடு ஊராட்சியில் உள்ள செம்பூர் கிராமத்தில் சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் திருமணம் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகள் நடத்துவதற்க்கு சமுதாய நலக்கூடம் ஏதும் இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் பொதுவெளியில் விசேஷ நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு இருக்கின்றனர். ஆகையால் பொதுமக்களின் நீண்டகால  கோரிக்கையான சமுதாய நலக்கூடத்தை  தாங்கள் ஆதி திராவிடர் நலத்துறை மூலம் அமைத்து தருவதற்கு ஆவணம் செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். கோரிக்கை மனுவினை பெற்றுக்கொண்ட அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கிளாங்காடு ஊராட்சி செம்பூர் காலனி பகுதியில் சமுதாய நலக்கூடம் கட்டித்தர விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.