districts

img

குடிநீர்க் குழாய்களை சீர் செய்திடக் கோரி நகர் மன்ற உறுப்பினர்கள் தர்ணா

குழித்துறை, ஆக. 17 குழித்துறை நகராட்சி யின் அனைத்து வார்டுகளி லும் புதிய குடிநீர் இணைப்பு ஐயுடிஎம் (iudm) திட்டத்தின் கீழ் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் உடைக்கப்பட்ட சாலைகள் மற்றும் குடிநீர் குழாய்களை  உடனே  பதித்து  சீர் செய்திட கேட்டு குழித்துறை நகராட்சி அனைத்து நகர மன்ற உறுப்பினர்கள் நக ராட்சி அலுவலகம் முன் சத்தியா கிரகப் போராட்டம் நடத்தினர்.  நகர்மன்ற தலை வர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். நகரமன்ற உறுப்பினர் சர்தார் ஷா துவக்க உரையாற்றினார். துணைத் தலைவர் பிரவீன் ராஜா, நகர மன்ற உறுப்பி னர்கள் லலிதா, விஜய லட்சுமி,ஜெலிலா ராணி, விஜீ,ரோஸ்லெட், ரீகன், லில்லி புஷ்பம்,  ரத்தின மணி,அருள்ராஜ்,ரவி,ஆ ட்லின்ஹெனின்,ஜெயந்தி, ஜெயின் சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

;