விருதுநகர், ஆக.10- கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஓ.எச்.டி ஆபரேட்டர்கள், தூய்மை பணியா ளர், தூய்மை காவலர்களை பணி நிரந்த ரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு-ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவல கம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத் திற்கு ஆர்.விஜயபாண்டி தலைமை யேற்றார். துவக்கி வைத்து மாவட்டத் தலை வர் எம்.திருமலை பேசினார். முடிவில் மாவட்ட செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணி யன் உரையாற்றினார்.