திருவில்லிபுத்தூர், நவ.24- மோட்டார் வாகன சாலை வரியை ரத்து செய்ய வேண்டும், ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சாலை போக்குவரத்து சம்மேளன கூட்டமைப்பு (சிஐடியு), அனைத்து மோட்டார் வாகன பாதுகாப்பு நலச் சங்கங்கள் சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவ லரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதில் சங்கத்தின் விருதுநகர் மாவட்டத் தலைவர் கே.விஜயகுமார், மாவட்டச் செயலாளர் எம்.திருமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சாலைப் போக்குவரத்து சம்மேளன மாவட்டச் செயலாளர் திருமலை தலைமை வகித்தார். சாலைப் போக்கு வரத்து சம்மேளன அகில இந்திய நிர்வாக குழு உறுப்பினர் கண்ணன், சிஐடியு இராஜபாளையம் நகர கன்வினர் சுப்பிரமணியன், மாவட்டக் குழு உறுப்பினர் வீர சதானந்தம், சிபிஎம் ஒன்றிய செயலாளர் சசிகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.