districts

img

ஸ்டேட் வங்கியை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம்,ஜன.14- தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான  தைப்பொங்கல் அன்று ஸ்டேட் வங்கி நிர்வாகம்  வேலைக்கு ஆள் எடுக்கும் தேர்வை நடத்துவதை கண்டித்தும், மாற்றுத் தேதி அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இராமநாதபுரத்தில் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணை தலைவர் வி.பாஸ்கரன் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் எம்.அய்யாதுரை, ஆர்.குருவேல், எம்.மலைராஜன், ஆர்.வாசு தேவன், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க செயலாளர் டி.முத்துப் பாண்டி  ஆகியோர் பேசினர். சிஐடியு மாவட்ட செயலாளர் எம்.சிவாஜி  நிறைவுரையாற்றினார்.