districts

img

ஆட்டோ ஓட்டுநர் மீது கொடூர தாக்குதல் மருத்துவமனையில் அனுமதி

நாகர்கோவில், ஆக.30  கன்னியாகுமரி மாவட்டம் அருமனை ஆட்டோ நிறுத்தத்தில் மது போதையில் ஆட்டோ ஓட்டுகிறார்கள் என்று இரண்டு ஓட்டுநர்களை காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுடிறது. இதை சக ஓட்டுநர்கள் சொல்லித்தான்  காவல்துறையினர் அழைத்துச் சென்றார்கள் என்கிற தவறான எண்ணத்தின் அடிப்படையில் சி ஐ டி யு சங்கத்தைச் சார்ந்த ஷாஜி என்ற ஓட்டுநரை மற்றொரு ஓட்டுநர் அழைத்து, நீதானே மது போதையில் இருந்தவர்களை போலீசுக்கு சொல்லிக் கொடுத்தாய் என்று சொல்லி,கடுமையாக தாக்கி காயப்படுத்தியுள்ளார்.  காயமடைந்த ஷாஜி அருமனை அரசுமருத்துவமனவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டு தொடர்ந்துமேல் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு  சிகிச்சை  பெற்று வருகிறார். அவரை கன்னியாகுமரி மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க சிஐடியு மாவட்டச் செயலாளர் பொன். சோபனராஜ், மாவட்ட பொருளாளர் பெஸ்லி பெல் மற்றும் ஸ்டாண்ட் நிர்வாகிகள் விஜயராஜ், எடிசன், மோகன்,ஜஸ்டின் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.