மதுரை, ஆக.12- மதுரை ஆவினில் திங்களன்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய முகவர்களிடம் வழங்கப் பட்ட பாலில் சுமார் 6000 லிட்டருக்கு மேல் கெட்டுப் போன நிலையில், அவற்றை முகவர்கள் மாற்றி சென்றுள்ளனர். இதுகுறித்து சிஐடியு தமிழக கூட்டுறவு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் துரைசாமி கூறுகை யில், மதுரை ஆவினில் திங்க ளன்று அதிகாலை பால் நுகர்வோ ருக்கு விநியோகம் செய்யப்பட்ட டெலைக்ட் என்று சொல்லப்படுகிற கௌ மில்க் 200 மற்றும் 500 மில்லி லிட்டர் பால் பாக்கெட்டுகள் கெட் டுப் போய் விட்டதாக நுகர்வோரி டமிருந்து புகார்கள் வந்ததை யொட்டி பால் முகவர்கள் கெட்டுப் போன பாக்கெட்டுகளை நுகர்வோ ரிடமிருந்து பெற்று ஆவின் தலை மையகத்திற்கு வந்து மாற்றிச் சென்றுள்ளனர். மதுரை ஆவின் தினந்தோறும் சுமார் இரண்டரை லட்சம் லிட்டர் பாலை பதப்படுத்தி நுகர்வோருக்கு விநியோகம் செய்யக்கூடிய ஒரு கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனமா கும். அந்த நிறுவனத்தில் பணிபுரி கிற மொத்த பணியாளர்களில் 20% கூட நிரந்தர பணியாளர்கள் இல்லை. பால் உற்பத்தி உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் ஒப்பந்த பணியாளர்களே பணி புரிகிறார் கள். மக்கள் உடல் நலத்தோடும் உயிரோடும் தொடர்புடைய பால் மற்றும் பால் பொருட்களை தயா ரிக்கக் கூடிய ஒரு நிறுவனத்தில் இவ்வாறு ஒப்பந்த தொழிலாளர் களை வைத்து உற்பத்தி செய்வது ஆபத்தான நடவடிக்கை ஆகும். எனவே, ஒப்பந்த தொழிலாளி களை நியமிக்காமல் நிரந்தர பணி யாளர்களை நியமிக்க வேண்டும் என்று மதுரை மாநகர் மாவட்ட சிஐ டியு மற்றும் மதுரை ஆவின் சிஐடியு கிளை தொடர்ச்சியாக தமிழக அரசு, பால்வளத்துறை மற்றும் ஆவின் நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரி க்கை வைத்து வருகிறது. ஆனால் இந்த கோரிக்கைகளை சம்பந்தப் பட்டவர்கள் தொடர்ந்து அலட்சி யம் செய்து வருகிறார்கள். இன்று (திங்கள்) நடைபெற் றுள்ள இந்த தவறுக்கு ஆவின் நிர்வாகம் யாரையும் பொறுப்பாக்க முடியாது. காரணம் உற்பத்தி பிரி வில் பெரும்பாலானோர் ஒப்பந்த பணியாளர்களாக உள்ளனர். ஒப்பந்த பணியாளர்கள் மீது எந்த வித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க சட்டத்தில் வழிவகை இல்லை. எனவே இனிமேலாவது அனைத்து ஆவின் நிறுவனத்தில் உள்ள காலிப் பணியிடங்களில் நிரந்தரப் பணியாளர்களை நிய மிக்க வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் பால்வளத் துறையை சிஐடியு கேட்டுக்கொள்கிறது. மேலும் ஆவின் நிறுவனம் உற்பத்தி செய்கிற பாலின் தரத் தினை சிறப்பாக பராமரிக்க பிஎம்சி பால் கொள்முதல் முறையினை கை விட்டு ( பால் உற்பத்தியாளர்களிட மிருந்து பாலை கொள்முதல் செய்து ஆவின் நிறுவனத்திற்கு அனுப்புகிற உரிமை கிராம அளவில் ஒரு தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது )
ஏற்கனவே இருந்தது போல் பாலை நேரடியாக உற்பத்தியாளர்களிடமிருந்து ஆவின் நிறுவனமே கொள்முதல் செய்ய வேண்டும் என்று தெரி வித்தார். மேலும் இந்த தகவல் குறித்து ஆவின் நிர்வாகத்தின் தரக்கட்டுப் பாட்டு மையத்தை தொடர்பு கொண்டபோது, முறையான பதிலில்லை. மேலும் முகவர்கள் தரப்பில் இருந்து கூறுகையில், அவ்வப்போது ஒன்று, இரண்டு பாக்கெட்டுகள் இதுபோல் வரும். ஆனால் இன்றைக்கு வந்த பாக் கெட்டுகளில் அதிக அளவு கெட்டுப் போனதாகவே இருந்தது. வாங்கிச்செல்லும் பொதுமக்கள் பாலை காய்ச்சும் போது கெட்டுப் போனது தெரிகிறது என்று கூறி னர். மேலும் சிலர், பால் தயிர் போல் மாறி கெட்டுப்போன நிலையில் உள் ளது திருப்பி கொண்டு வந்தனர். இதேபோல் கடந்த சில நாட்க ளுக்கு முன் கடைகளுக்கு விநி யோகம் செய்யப்படும் ஒரு லிட்டர் பால் பாக்கெட்டுகள் கெட்டுப் போன நிலையில் அதை முக வர்கள் வந்து திருப்பி கொடுத்து பின்னர் அதை ஆவின் நிர்வாகத்தி டம் மாற்றி சென்ற சம்பவம் நடை பெற்றது என்று கூறினர். ஆவினில் திங்களன்று மதியம் வரை சுமார் 6000 லிட்டருக்கு மேல் பால் பாக்கெட்டுகளை விநியோ கஸ்தர்கள் திருப்பி கொடுத்து விட்டு சென்றுள்ளனர். மதுரையில் ஒரே நாளில் ஆவின் பால் இவ்வ ளவு கெட்டுப் போய் திருப்பி வாங் கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.