districts

img

பேரியம் நைட்ரேட் மீதான தடையை நீக்கிடுக!

சாத்தூர், ஆக.16- பட்டாசு தயாரிப்பதற்கான முக்கிய மூலப் பொருளான பேரியம் னைட்ரேட் மீதான தடையை நீக்க வேண்டும், சர வெடி உற்பத்தி செய்வதற்கான தடை  நீக்க வேண்டும், பட்டாசு தொழிலா ளர்களுக்கு தீபாவளி போனஸ் 50சத வீதம் உயர்த்த வேண்டும்,  கூலியை  உயர்த்தி அறிவிக்கப்பட்ட அரசாணை யை உடனே அமல்படுத்த வேண்டும் என்று சிஐடியு பட்டாசு தீப்பெட்டி தொழி லாளர் சங்க பேரவை வலியுறுத்தி யுள்ளது.  சாத்தூரில் நடைபெற்ற பேர வைக்கு  மாவட்ட தலைவர் கே.முருகன்  தலைமை வகித்தார், துவக்கி வைத்து  சிஐடியு மாவட்ட தலைவர் எம். மகா லட்சுமி பேசினார். சிஐடியு மாவட்ட செய லாளர்  பி.என்.தேவா நிறைவுரையாற்றினார்.   அனைத்து பட்டாசு மற்றும் தீப்பெட்டி ஆலைகளில் தேவையான அளவுக்கு கழிப்பறை வசதி குடிநீர் வசதி முதலுதவி மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும்.  புதிய பட்டாசுக்  கடைகளுக்கான உரிமம் வழங்க வரு வாய் துறை, காவல் துறை ,உள்ளாட்சி,  ஊரக வளர்ச்சி துறை,மற்றும் தீய ணைப்பு மற்றும் மீட்பு துறை, மின்சார வாரியம்  ஆகிய அரசு  அலுவலகங்க ளில்  லஞ்சம் கேட்பதை தடுத்து நிறுத்த  வேண்டும்,  மாவட்ட வருவாய் அலு வலர் கடைகளை பார்வையிடுவதை யும் பட்டாசு ஆலை உரிமம் பெறுவதை யும் காலதாமதமின்றி உடனுக்குடன் வழங்குவதை உறுதி  செய்ய வேண்டும்  என மாவட்ட பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, புதிய நிர்வாகிகள் தேர்வு நடை பெற்றது,  மாவட்ட பொதுச் செயலாள ராக  எம்.சி.பாண்டியன், மாவட்டத் தலை வராக பி,என்,தேவா,  பொருளாளராக ஜெபஜோதி  உதவி தலைவர்களாக  கே. விஜயகுமார்,   கே கண்ணன், எம்.  பாலகிருஷ்ணன்  ஏ. சீனிவாசன் ஆகியோ ரும்,   துணை செயலாளர்களாக  கே. முரு கன்,  எம். பிச்சைக்கனி,  பி .கிருஷ்ண மூர்த்தி, மனோஜ் குமார்  ஆகியோர்  தேர்ந்தெடுக்கப்பட்டனர், இப்போவை யில் திரளளான பட்டாசுத் தொழிலா ளர்கள் பங்கேற்றனர்.