சின்னாளப்பட்டி, ஏப்.16- ‘‘படர்தாமரை உடலுக்கு கேடு; ஆகாயத்தாமரை குளத்திற்கு கேடு; பாஜகவின் தாமரை இந்திய நாட்டுக்கே கேடு’’ என்று திரைக் கலைஞர் கரு ணாஸ் பேசினார். திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் திண்டுக்கல் நாடாளு மன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பா ளர் ஆர்.சச்சிதானந்தத்தை ஆதரித்து முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவரும் திரைக் கலைஞருமான கருணாஸ்வத்தலக்குண்டு அருகே விருவீடு பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரச்சாரத்தில் கருணாஸ் பேசுகை யில், ‘‘உலகில் பொய் சொல்கிறவர்க ளில் போட்டி வைத்தால் முதல் இடத்தில் மோடியும், இரண்டாவது இடத்தில் அண்ணாமலையும் இருப்பார்கள். இவர்கள் வாயால் சுட்ட வடைகள் கொஞ்சம் நஞ்சம் இல்லை. திருக்குறளை அவமானப்படுத்திய வர் மோடி.
எதற்கெடுத்தாலும் வரி போட்டு மக்களை வாட்டுகிறார். ஏழை விவசாயிகள், பொதுமக்கள் எப்படி அதீத வரி கட்ட முடியும்? பிரதமர் மோடி மொழியை பாதுகாப்போம் என்று தமிழ்நாட்டுக்கு வந்தவுடன் வாய் கிழியப் பேசுகிறார்; ஆனால் ஒரே மொழி என இந்தியைத் திணிக்க முயல்கிறார். படர்தாமரை உடலுக்கு கேடு, ஆகா யத்தாமரை குளத்திற்கு கேடு, பாஜக வின் தாமரை இந்திய நாட்டிற்கே கேடு. எனவே பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. மோடியை வீட்டுக்கு அனுப்பும் நாள் நெருங்கிவிட்டது’’ என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ‘‘நமது வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளராக இருந்து ஒவ் வொரு விவசாயிகளின் குறைகளை யும் கேட்டு அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்து, பல போராட்டங்களில் கலந்து கொண்டவர். ஆனால், எதிர்க்கட்சி வேட்பாள ரான நெல்லை முபாரக் சிஏஏ சட்டத் திற்கு எதிராக பேசிவிட்டு, இப்போது அதிமுகவுடன் கூட்டுச் சேர்ந்து திண்டுக் கல் தொகுதியில் போட்டியிடுகிறார்’’ என்று விமர்சித்தார். நிகழ்ச்சிக்கு வத்தலக்குண்டு தெற்கு ஒன்றியச் செயலாளர் கனிக் குமார் தலைமை வகித்தார்.
வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.பி.முருகன், திமுக தலைமை செயற்குழு உறுப்பி னர் கனகதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநிலக் குழு உறுப்பினர் பி.டில்லி பாபு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆசாத், மாவட்டக் குழு உறுப்பினர் கே.டி.கலைச் செல்வன், ஒன்றியச் செயலாளர் தெய் வேந்திரன், விவசாயிகள் சங்க ஒன்றி யச் செயலாளர் ஸ்டாலின், ஒன்றியத் தலைவர் சடமாயன் மற்றும் தோழ மைக் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.