districts

img

சின்னாளப்பட்டி பேரூராட்சி கூட்டம்

சின்னாளப்பட்டி, மே 31- திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி சிறப்புநிலை பேரூராட்சி கூட்டம் தலைவர் பிரதீபா கனகராஜ் தலைமை யில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு செயல் அலுவலர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்,துணைத் தலைவர் ஆனந்திபாரதி ராஜா வரவேற்றார். கூட்டத்தில் தமிழக நலன் கருதி சிங்கப்பூர்,ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று பல சர்வதேச நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து பல  ஆயிரம் கோடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து தமி ழகம் வரும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், முத்தமிழ் அறிஞர் முன்னால் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை மக்களுக்கு சேவை வாரமாக கொண்டாடவும் தலைவர் பிரதீபா கொண்டுவந்த தீர்மானம் அனைத்து கவுன்சிலர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. பேரூராட்சித் தலைவர் பேசுகையில், கவுன்சிலர்களின்  அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றார்.  இக்கூட்டத்தில் சுகாதார ஆய்வாளர் கணேசன், துப்புரவு  மேற்பார்வையாளர் தங்கதுரை,சரளா மற்றும் அலுவலக  பணியாளர்கள் கலந்து கொண்டனர். தலைமை எழுத்தர் கலியமூர்த்தி நன்றி கூறினார்.

;