districts

img

தென்காசி மாவட்டத்தில் குழந்தைகள் தின விழா

தென்காசி ,நவ. 15 இடைகால், நைனாரகரம் ஊராட்சிகள் மற்றும் சமூக ஆர்வ லர்கள் இணைந்து தென்காசி மாவட்டம் இடைக்காலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திங்கட்கிழமை அன்று குழந்தை கள் தின விழாவை கொண்டாடி னர். விழாவிற்கு நைனாரகரம் ஊராட்சி தலைவர் கே.முத்தையா தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரிய ரும் சமூக ஆர்வலருமான மாரியப் பன் குழந்தைகள் தினம் குறித்து  கருத்துரை வழங்கினார் .விழாவில் ஊர் மேல் அழகியான் மேல்நிலைப் பள்ளி, தொடக்கப்பள்ளி, இடை கால் அரசு உயர்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி ,துரைச்சாமிபுரம் இந்து மறவர் துவக்கப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். விழாவினை முன்னிட்டு அந்தந்த பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவ மாணவிய ருக்கு பல்வேறு போட்டிகள்  நடத் தப்பட்டன.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு   இடைகால் ஊராட்சி மன்ற தலைவர் முத்தம் மாள், ஒன்றிய கவுன்சிலர் மாரிச் செல்வி, கடையநல்லூர் சார்பு ஆய்வாளர் கருப்பசாமி, எலும்பு முறிவு மருத்துவ நிபுணர் சுரேந்தி ரன், சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் ஆதிசேஷன், சமூக ஆர்வலர் கணபதி உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர் .

விழாவில் ஊர் மேல் அழகி யான் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகையா, இடைகால் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சிதம்பரநாதன், சுகாதார ஆய்வாளர் முருகையா, இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சார்லஸ், அனைத்திந்திய  ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆயிஷா பேகம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மாடசாமி, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அருண் மற்றும் முன் னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள், மாணவ மாணவியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆலங்குளம் தாலுகா குருவன்கோட்டையில் மாதர் சங்கம் சார்பாக குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. விழா விற்கு மாதர் சங்க மாவட்டப் பொரு ளாளர் சசிகலா தலைமை தாங்கி னார். விழாவில் குழந்தைகளுக்கு பல்வேறு விதமான விளையாட்டு கள் சொல்லித் தரப்பட்டன .மற்றும் போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கள் வழங்கப்பட்டன. மாதர் சங் கத்தின் ஆலங்குளம் தாலுகா நிர்வா கிகள் மற்றும் குழந்தைகள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

கடையம் ஒன்றியம்

கடையம் ஒன்றியம் புலவனூர் கிராமத்தில் மாதர் சங்கம் சார்பாக குழந்தைகள் தினவிழா திங்களன்று கொண்டாடப்பட்டது. விழாவில் பெண் குழந்தைகள் அன்னியர் கொடுக்கும் பொருட்களை வாங்க மாட்டோம், அன்னியர்களை தொட அனுமதிக்க மாட்டோம் என்ற உறுதி மொழியை எடுத்தனர். நிகழ்வில் மாதர் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.