திருப்பூர், ஜன. 12 - மத்திய அரசின் திட்டத்தின் கீழ் திருப்பூரில் தொழிலா ளர்களுக்கு திறன் பயிற்சி அளித்த 26 நிறுவனங்களுக்கு காசோலை வழங்கப்பட்டது. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சங்கத் தலைவர் கே.எம்.சுப்பிரம ணியம் திறன் பயிற்சி அளித்த நிறுவனங்களை பாராட்டி பேசி, இந்த காசோலைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கினார். சமர்த் திட்டத்தில் திருப்பூரில் மொத்தம் 11 ஆயிரத்து எட்டு பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க திருப்பூர் ஏற்றுமதி யாளர் சங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 890 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 800 பேருக்கு தற் போது பயிற்சி அளிப்பதுடன், மேலும் 650 பேருக்கு ஜனவரி இறுதிக்குள் பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் திறன் மேம்பாட்டு துணைக் குழு தலைவர் ஆர்.சக்திவேல் வரவேற்றார். பொதுச் செயலாளர் திருக்குமரன் வருங்காலங்களில் தொடர்ந்து திறன் பயிற்சி அளித்து பயனடையும் படி தொழில் நிறுவ னங்களை கேட்டுக் கொண்டார். ஏற்றுமதியாளர் சங்க இணை செயலாளர் குமார் துரைசாமி நன்றி கூறினார்.