இராஜபாளையம், ஆக.10- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள கோபாலபுரம், குறிச்சியார்பட்டி பகுதிகள் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியாகும். இந்த பகுதியில் சுமார் 35 தொகுப்பு வீடுகள் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதாக சாத்தூர் சட்டமன்ற உறுப்பினருக்கு பகுதி மக்கள் மனு கொடுத்தனர். அதன் அடிப்படையில் அப் பகுதியை ஆய்வு செய்த சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ.ஆர்.ஆர். ரகுராமன், குறிச்சியார்பட்டியில் 14 வீடுகளுக்கும், கோபாலபுரத்தில் 21 வீடுகளுக்கும் பழுது பார்க்க சட்டமன்ற உறுப்பினர் ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். மேலும் பழுதடைந்த வீடுகளை பார்வையிட்டு வீடு களை சரி செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்த குமார், கோபாலபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சுதா ஜெயக்குமார், குறிச்சியார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முத்துராஜ், ஒன்றிய பணி குழு மேற்பார்வளர்கள் கண் ணன், மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.