வங்கி பாஸ்புத்தகத்தில் புகைப்படம், கையெழுத்தை மாற்றிப் போட்டு மோசடி: ஒருவர் கைது
தேனி நவ. 4- தேனி மாவட்டம், தேவாரம் அருகே டி.சிந்தலைச் சேரியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (38). இவரது மனைவி ஆரோக்கிய பெத்திசியா (25). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 27.9.2022 ஆம் தேதி ஆரோக்கிய பெத்திசியா 2 ஆவது மகனுடன் மருத்துவ மனைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்ப வில்லை. இதுகுறித்து இருவரையும் காணவில்லை என ஆரோக்கியசாமி தேவாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இதில் ஆரோக்கிய பெத்திசியாவும், இதே ஊரைச் சேர்ந்த மற்றொரு ஆரோக்கியசாமி மகன் வினோத் (27) என்பவரும் சேர்ந்து சிந்தலைச்சேரியில் உள்ள அரசுட மையாக்கப்பட்ட வங்கிக்கு வந்து சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஆரோக்கியசாமி இந்த வங்கியில் நகைகளை அடகு வைத்துள்ளார். இதற்கான வங்கி பாஸ்புத்தகத்தில் வினோத்தின் புகைப்படத்தை ஒட்டி யும், கையெழுத்தை மாற்றி போட்டும் ஆள்மாறாட்டம் செய்து அடகு நகைகளை திருப்பிச் சென்றதும் தெரிய வந்தது. இதுகுறித்து ஆரோக்கியசாமி தனி புகார் செய்ததன் பேரில் தேவாரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வினோத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஆரோக்கிய பெத்திசியாவை தேடி வருகின்றனர்.
மதுரையில் தனியார் மில்களில் 27 டன் ரேசன் அரிசி பறிமுதல் : ஒருவர் கைது
மதுரை, நவ. 4- குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் சினேகப்பிரியா தலைமையில் மதுரை மாவட்டம் கரிசல்குளம், பனையூர் மற்றும் அனுப்பானடி ஆகிய இடங்களில் சட்டத்திற்கு விரோத மாக செயல்பட்டு வந்த தனியார் மில்களில் தீடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது தனியார் மில்லான கரிசல்குளத்தில் சுமார் 8500 கிலோ ரேசன் புழுங்கல் அரிசியும், பனையூர் தனியார் மில்லில் சுமார் 14000 கிலோ ரேசன் புழுங்கல் அரிசியும், அனுப்பானடியில் உள்ள தனியார் மில்லில் சுமார் 4700 கிலோ ரேசன் புழுங்கல் அரிசியும் என மொத்தம் 27,200 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு தனித் தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் பனையூரில் இயங்கி வரும் மில்லை நடத்தி வந்த முத்துகிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இரண்டு மில்களுக்கும் ரேசன் அரிசியை கடத்து வதற்கு துணையாக இருந்த மதுரையைச் சேர்ந்த தட்சிணா மூர்த்தி, செல்வம் கண்ணாயிரமூர்த்தி ஆகியோர் தலை மறைவாகினர். அவர்களை தேடி வருகின்றனர். விசாரணையில் மில்களில் வாங்கப்படும் ரேசன் அரிசியானது கோழி மற்றும் மாட்டு தீவனத்திற்காக அரைக்கப்பட்டு பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைப்பதாக தெரியவருகிறது. இதுபோல் சட்டத்திற்கு புறம்பாக ரேசன் அரிசி கடத்தும் நபர்கள் மற்றும் அரிசி ஆலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை கோட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் இராமநாதபுரம் ஆட்சியர் அறிவிப்பு
இராமநாதபுரம்,நவ.4- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலகிலுள்ள 9 வட்டாட்சியர் அலுவலகங்களில் காலியாக உள்ள 50 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அளிக்கக் கோரி கடந்த 10.10.2022 மற்றும் 11.10.2022 அன்று இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 9 வட்டாட்சியர்களும் அறிவிக்கை வெளியிட்டுள்ளனர். கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையரின் கடித எண். . RA II (2)/ 01-04/468/2022 நாள் 15.10.2022 கடி தத்தில் தெரிவித்துள்ளவாறு கிராம உதவியாளர்கள் பணி யிடங்கள் வழங்க கோரப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் கீழக்கண்ட இணையதளம் வாயிலாக மட்டுமே பெறப்பட வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளதால் கீழ்க்காணும் இணையதள முகவரிக ளில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். எனவே, நேர டியாகவோ, தபால் மூலமாகவோ விண்ணப்பித்தவர்கள் இணையதளம் மூலமாக தவறாது விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.1.https:// www.tn.gov.in , 2.https://cra.tn.gov.in, 3. https://ramanatha puram.nic.in இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது தேனி ஆட்சியர் உத்தரவு
தேனி ,நவ.4- தேனி மாவட்டத்தில் கொலை வழக்கு ,மணல் கடத்தல் வழக்கில் தொடர்புடைய 4 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய தேனி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். உத்தமபாளையம் வட்டம் ,தேவாரம் அமராவதி நகரில் குடியிருந்து வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த சீனி மகன் மணிகண்டன்,அவரது மனைவி சுந்தர லட்சுமி, அவரது மகன் ராமகிருஷ்ணன் ஆகியோர் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் .இவர்களை மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதே போல போடி வட்டம்,பாலார்பட்டியை சேர்ந்த பாண்டியன் மகன் சதீஷ்குமார் மணல் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர். அவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்திருந்தார் .அதன் பேரில் 4 பேரை யும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் உத்தரவிட்டுள்ளார்.
ஆத்தூர்,நிலக்கோட்டையில் வளர்ச்சிப் பணிகளை ஊராட்சித்துறை ஆணையர் ஆய்வு
சின்னாளபட்டி,நவ.04- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் மற்றும் நிலக்கோட்டை தாலுகாக்களில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் விசாகன் முன்னிலையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி- ஊராட்சித்துறை ஆணையர் மரு.தாரேஷ் அகமது ஆய்வு செய்தார். இதில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஆத்துார் ஊராட்சி ஒன்றியம், என்.பஞ்சம்பட்டி கிராமத்தில், ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பு மூலம் செயல்படும் திடக்கழிவு மேலாண்மை, நெகிழி மறுசுழற்சி மையத்தினையும், பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள், மற்றும் ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், அம்பாத்துறை முதல் செம்பட்டி வரை உள்ள சாலையில் பச்சைமலையான்கோட்டை பிரிவு முதல் பச்சைமலையான்கோட்டை வரை ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை மேம்பாட்டுப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து, நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிர்வாகப்பிரிவு, பொறியியல் பிரிவு, கணினி பிரிவு, அலுவலகப் பிரிவுகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். பின்னர் சிலுக்குவார்பட்டி ஊராட்சி, குப்பழனிபட்டியில் பிரதமர் குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை பார்வையிட்டார். தொடர்ந்து பள்ளப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியையும் நேற்று பல்வேறு இடங்களில் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, திண்டுக்கல் கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) ச.தினேஷ்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்து, திட்டப்பணிகள் குறித்து விளக்கினர்.
தேனி மாவட்டத்தில் கடன் இலக்கு ரூ.8275.04 கோடி: ஆட்சியர் தகவல்
தேனி ,நவ.4- தேனி மாவட்டத்தில் 2023-2024-ஆம் நிதியாண் டில் ரூ.8275.04 கோடி கடன் வழங்கிட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் க.வீ.முர ளீதரன் தெரிவித்துள்ளார் . தேனி மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் வங்கியா ளர்களுடனான ஆலோச னைக் கூட்டம் மாவட்ட ஆட்சி யர் க.வீ.முரளீதரன் தலை மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் 2023-2024-ஆம் ஆண்டிற்கான தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி யின் (நபார்டு) சார்பில் கடன் திட்ட அறிக்கையினை வெளியிட்டு, தெரிவித்த தாவது: தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (நபார்டு) சார்பில் தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் வங்கி களின் மூலம் 2023-2024-ஆம் நிதியாண்டில் ரூ.8275.04 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள் ளது. இதில் வேளாண்மை மற்றும் இணை தொழில்க ளுக்கு ரூ.6,600 கோடியும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ஆயிரம் கோடியும், மீதமுள்ள தொகை முக்கிய திட்டங்க ளுக்கு ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது என்றார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தி.சுப்பிரமணியன், மகளிர் திட்ட அலுவலர் ஜெ.ரூபன் சங்கர்ராஜ், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அசோகன், மாவட்ட வளர்ச்சி மேலாளர் (நபார்டு) சு.சக்திபாலன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் டி.மோகன்குமார். உதவி பொது மேலாளர் ரமேஷ், அனைத்து வங்கி மேலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்டத்தில் பரவலாக மழை சுருளி, கும்பக்கரை அருவிகளில் குளிக்கத் தடை
தேனி ,நவ.4- தேனி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரண மாக சுருளி ,கும்பக்கரை அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் சுற்றுலா பயணி கள் குளிக்க வனத்துறை யினர் தடை விதித்துள்ளனர். தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை நீடித்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் முழுக்கொள்ள ளவை எட்டி உபரி நீர் திறக் கப்பட்டு வருகிறது. முல்லைப் பெரியாறு, வைகை, வராகநதி, கொட் டக்குடி ஆறுகளில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. மேலும் கும்பக்கரை, சுருளி அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வரு கிறது. எனவே பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். தேனி மாவட்டத்தில் கன மழை தொடர்ந்து வருவ தால், முதல் போக நெல் சாகுபடி அறுவடை பணிகள் நடைபெற்று வருவதாலும் முல்லை பெரியாறு அணை யில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. வியாழனன்று 1500 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலை யில் வெள்ளிக்கிழமை காலை நீர் திறப்பு 511 கன அடியாக இருந்தது.அணை யின் நீர்மட்டம் 134.25 அடி யாக உள்ளது. 763 கன அடிநீர் வருகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 69.46 அடியாக உள்ளது. 1759 கனஅடிநீர் வருகிறது. அணையிலி ருந்து மதுரை மாநகர குடி நீர் மற்றும் பாசனத்திற்காக 1819 கன அடி நீர் திறக்கப் படுகிறது. மஞ்சளாறு அணை யின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவான 55 அடி யில் 3 மாதங்களுக்கு மேல் நீடித்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் 132 கனஅடியில் 40 கனஅடி நீர் பாசனத்திற்கும் 92 கன அடிநீர் உபரியாகவும் திறக் கப்படுகிறது. சோத்துப் பாறை அணையும் நிரம்பி 126.44 அடியில் உள்ளது. 226 கனஅடிநீர் வருகிறது. இதில் 30 கன அடி நீர் பாச னத்திற்கும், 196 கனஅடி நீர் உபரியாகவும் திறக்கப் படுகிறது. மழையளவு பெரியாறு 6, தேக்கடி 25.2, கூடலூர் 6.4, உத்தம பாளையம் 1.6, வைகை அணை 2.8, போடி 12.4, மஞ்சளாறு 4.6, சோத்துப் பாறை 36, பெரியகுளம் 28, வீரபாண்டி 12.2, அரண் மனைப்புதூர் 4.6 மி.மீ மழை அளவு பதிவாகி உள்ளது.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இருவருக்கு 10 ஆண்டு ஜெயில்
விருதுநகர், நவ.4- 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இராஜபாளையம் அருகே உள்ள குடல்புரி நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து (34), மில் கிருஷ்ணா புரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (26). இவர்கள் இருவரும் கடந்த 2018 பிப்ரவரி 28 அன்று சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் இராஜபாளை யம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்த னர்.மேலும் இது தொடர்பான வழக்கு திருவில்லி புத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணஜெயஆனந்த், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காளிமுத்து மற்றும் விஜய் ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டு கள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 4 ஆயிரம் அபராத மும் விதித்து தீர்ப்பளித்தார்.
மரம் வெட்டியதாக இருவர் மீது வழக்கு
தேனி ,நவ.4- ஆண்டிபட்டி அருகே அரசு தரிசு நிலத்தில் மரம் வெட்டியதாக ராஜதானி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் . தேனி மாவட்டம், பாலக்கோம்பை வருவாய் கிரா மத்தில் அரசு தரிசு நிலத்தில் உள்ள புளிய மரம் ,இரண்டு வேப்பம் மரங்களை ராயவேலுரை சேர்ந்த வேலுச்சாமி மனைவி செல்லியம்மாள் ,சின்னமாயன் மகன் மாரிசாமி ஆகியோர் வெட்டி வைத்திருப்பதாக கிராம நிர்வாக அலு வலர் தேவிக்கு தகவல் கிடைத்தது இது தொடர்பாக இருவர் மீது ராஜதானி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் செல்லியம்மாள் ,மாரிசாமி ஆகி யோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருநகரத்தில் வார்டுசபைக் கூட்டம்
அருப்புக்கோட்டை, நவ.4- விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நகராட்சி 16 ஆவது வார்டுக்கு உட்பட்டது திருநகரம். இங்கு, உள்ளாட்சி தினத்தையொட்டி வார்டு சபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகர்மன்ற உறுப்பினர் எஸ்.கே.பாலன் தலைமை தாங்கினார். அதில், அழகாபுரி தெரு வின் கிழக்கு பகுதியில் பாலம் கட்ட வேண்டும். சௌந்தர் ராஜபுரம் தெருவில் மினி பவர் பம்ப் அமைக்க வேண்டும். அனைத்து மின் கம்பங்களிலும் தெரு விளக்கு கள் அமைக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
அழகர்கோவில் நிலத்தை காட்டி ரூ.70 லட்சம் மோசடி : 6 பேர் மீது வழக்கு
விருதுநகர், நவ.4- விருதுநகர் அருகே உள்ள சூலக்கரை வீரப்பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த வர் ரங்கநாயகி. இவரது சகோதரர் சூரிய நாராயணன். சிங்கப்பூரில் உள்ளார். அவ ருக்கு நிலம் வாங்க ரங்கநாயகி முடிவு செய்தார். இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் சிவகிரிபட்டியை சேர்ந்த பத்மநாதபன் என்பவர், தான் ஓய்வு பெற்ற நீதிபதி எனவும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும் கூறியுள்ளார். மதுரை வண்டியூரில் 12 ஏக்கர் 70 செண்டு நிலம் ரூ.34 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்பனைக்கு உள்ளது என்று கூறியுள்ளார். இதனை நம்பி ரங்க நாயகி ரூ.70 லட்சம் வரை பத்மநாபனிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட அவர் நிலத்தை பதிவு செய்து தரவில்லை. இதுகுறித்து விசாரித்த போது பத்மநாபன் குறிப்பிட்ட நிலம் மதுரை கள்ளழகர் கோவிலுக்கு சொந்தமானது எனத் தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ரங்கநாயகி பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்ததோடு கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த மோசடிக்கு பத்மநாபனுடன் அவரது மகன் சதீஷ் மற்றும் சுமதி, அங்குராஜ், சந்திரன், குழந்தை செல்வம் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இதுகுறித்து ரங்கநாயகி மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் 3 வருவாய் கோட்டங்கள் மாற்றியமைப்பு
விருதுநகர், நவ.4- விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வரு வாய் கோட்டங்களில் ஒரு சில மாற்றங்கள் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக் கோட்டை, சிவகாசி மற்றும் சாத்தூர் என 3 வருவாய் கோட்டங்கள் உள்ளன. அதில் சிவகாசி கோட்டத்தில் சிவகாசி, திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு ஆகிய வட்டங்களும், சாத்தூர் கோட்டத்தில் சாத்தூர், வெம்பக்கோட்டை, இராஜபாளையம் ஆகிய வட்டங்களும், அருப்புக்கோட்டை கோட்டத்தில் அருப்புக்கோட்டை, காரியாபட்டி, விருது நகர், திருச்சுழி ஆகிய வட்டங்களும் இருந்தன. இந்நிலையில், அவற்றை மாற்றிய மைத்து தற்போது உத்தரவு வெளியாகி யுள்ளது. அதன்படி, சாத்தூர் கோட்டத்தில் விருதுநகர், சாத்தூர், வெம்பக்கோட்டை ஆகிய வட்டங்களும், சிவகாசி கோட்டத் தில் இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி, வத்திராயிருப்பு ஆகிய வட்டங்க ளும்,அருப்புக்கோட்டை கோட்டத்தில் அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி ஆகிய வட்டங்களும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.