districts

img

வேடசந்தூர் தொகுதி குளங்களில் காவிரி நதிநீர் நிரப்பப்படும்

வேடசந்தூர், ஆக.19- காவிரி ஆற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து வேடசந்தூர் தொகுதி முழுவதும் உள்ள குளங்களில் நிரப்பப்படும் என்று காந்திராஜன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நாயக்கனூரில் பகுதி நேர ரேசன் கடை திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சவுடீஸ்வரி கோவிந்தன் தலைமை வகித்தார்.  விழாவில் எஸ்.காந்தி ராஜன் எம்.எல்.ஏ., பங்கேற்று பகுதி நேர ரேசன் கடையை திறந்து வைத்து பொதுமக்க ளுக்கு பொருட்கள் விநியோ கம் செய்தார்.  பின்னர் அவர் பேசு கையில், பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று தற்போது பகுதி நேர ரேசன் கடை திறக்கப்பட்டுள் ளது. ரூ 1500 கோடி மதிப்பீட்டில் கரூர் காவிரி ஆற்றில் இருந்து குழாய் மூலமாக வேடசந்தூர் தொ குதியில் உள்ள குளங்களு க்கு தண்ணீர் கொண்டு வந்து நிரப்பும் திட்டம் தயார் நிலையில் உள்ளது. இந்த திட்டம் நிறைவேறினால் கிராமப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் விவசா யம் செழிக்கும், குடிநீர் பிரச்சனை முற்றிலும் தீரும் என்றார். விழாவில் எரியோடு பேரூராட்சி தலைவர் முத்து லட்சுமி கார்த்திகேயன், காவல் ஆய்வாளர் சத்திய பிரபா உள்பட பலர் பங்கேற்ற னர்.

;