தேனி, அக்.31- தேனி தொகுதி மக்க ளவை உறுப்பினரும், முன் னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்திற்கு சொந்த மான தோட்டத்தில் சிறுத்தை இறந்த விவகாரத்தில் சிபி சிஐடி விசாரணை கோரி கால் நடை வளர்ப்போர் தேனி கோட்ட வன அலுவலகம் முன்பு முற் றுகையில் ஈடுபட்டனர். பெரியகுளம் கைலாச பட்டி அருகே உள்ள சொர்க்க வனம் பகுதியில் கடந்த செப். 27-ஆம் தேதி மின்வேலியில் சிறுத்தை ஒன்று சிக்கி இருந் தது. இவற்றை மீட்க முயன்ற உதவி வனத்துறை அலுவ லரை தாக்கி விட்டு அந்தச் சிறுத்தை தப்பியோடியது. ஆனால் மறுநாளே அருகில் உள்ள தேனி தொகுதி மக்க ளவை உறுப்பினர் ப.ரவீந்திர நாத் தோட்டத்தில் உள்ள மின் வேலியில் சிக்கி இந்த சிறுத்தை இறந்து கிடந்தது. உடற் கூராய்வு செய்த வனத்துறை யினர், அந்த சிறுத்தையை வனப்பகுதியில் புதைத்த னர். சிறுத்தை இறந்த விவரம் குறித்து வன உயிரின ஆர் வலர்கள் சந்தேகம் எழுப்பி னர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட தோட்டத்தில் ஆட்டு கிடை அமைத்திருந்த அலெக்ஸ் பாண்டியன் கைது செய்யப்பட்டார்.
தோட்ட உரி மையாளர்களைக் கைது செய்யாமல் ஆடு வளர்த்த வரை கைது செய்ததிற்கு கால்நடை வளர்ப்போர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தோட்ட மேலாளர்கள் ராஜ வேல், தங்கவேல் ஆகி யோரை வனத்துறையினர் கைது செய்தனர். இருப்பினும் அலெக்ஸ் பாண்டியன் மீது போடப் பட்ட வழக்குகளை ரத்துசெய்து அவரை விடுவிக்கக் கோரி தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கம் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதி யாக திங்களன்று பெரிய குளம் சாலையில் இருந்து ஊர்வலமாக சென்ற கால் நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் மாவட்ட வன அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். சங்க பொதுச் செய லாளர் சரவணன் தலைமை வகித்தார். தேனி, ராமநாத புரம் மாவட்டத் தலைவர்கள் கிருஷ்ணன், அன்னக்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறுத்தையின் உடற் கூராய்வு அறிக்கையை வெளியிட வேண்டும். வழக்கை சிபிசிஐடி. விசாரிக்க வேண் டும். உண்மைக் குற்றவாளி களைக் கைது செய்ய வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை போராட் டத்தில் ஈடுபட்டவர்கள் வலி யுறுத்தினர். தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் போராட்டக் காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இத னைத் தொடர்ந்து போராட் டம் கைவிடப்பட்டது. அலெக்ஸ் பாண்டியன் மீதான பொய் வழக்கை ரத்துச் செய்யும் வரை போராட்டம் தொட ரும் என்று கால்நடை வளர்ப் போர் தெரிவித்தனர்.