districts

தீக்கதிர் விரைவு செய்திகள்

மோடி மீது கத்தோலிக்க அமைப்புகள் குற்றச்சாட்டு

புதுதில்லி, ஜன. 7- நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தடுக்க பிரதமர் நரேந்திர மோடியும், ஒன்றிய அரசும் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை என கத்தோலிக்க சங்கங்க ளின் கூட்டமைப்பு வெளிப்படையாக தெரி வித்துள்ளது. ஒன்றிய சிறுபான்மையினர் அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் மாநில அமைச்சர் ஜான் பெர்லா ஆகியோரிடம் பல் வேறு கிறிஸ்தவ அமைப்புகள் பலமுறை புகார் அளித்துள்ளன. அனைத்து குடிமக்களுக்கும் அரச மைப்புச் சட்டப் பாதுகாப்பை உறுதி செய்  வதே மைய வாக்குறுதியாக இருந்தது. இருப்பி னும், சத்தீஸ்கரில் நடைபெறும் கிறிஸ்தவர்  களின் துன்புறுத்தல் இந்த உறுதிமொழி களுக்கு முரணானது. கர்ப்பிணிகள், குழந்தை கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடி யினர் கிராமங்களை விட்டு வெளியேற்றப்  பட்டனர். வலுக்கட்டாயமாக இந்துக்களாக் கப்பட்டுள்ளனர். விசுவாசிகளின் உயிருக்கும் உடைமைகளைப் பாதுகாக்கவும் ஒன்றிய, மாநில அரசுகள் தயாராக இருக்க வேண்டும் என்று கிறிஸ்தவர் சங்கத்தின் தில்லி என்சிஆர் தலைவர் ஏ.சி.மைக்கேல் கேட்டுக் கொண்டுள்ளார். கர்நாடகாவில் பைபிள் விநியோகம் செய்த கிறிஸ்தவ மிஷனரிகள் சமூக விரோத கும்பலால் தாக்கப்பட்டனர். கடந்த டிசம்பர் 23ஆம் தேதி பெங்களூரு மல்லேஸ்வரத்தில் இந்த சம்பவம் நடந்தது. பைபிள்கள் மற்றும்  சாக்லேட்களை விநியோகித்த குழுவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்த  வீடியோ வெளியாகியுள்ளது. கிறிஸ்துமஸ்  கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பைபிள் கள் மற்றும் சாக்லேட்கள் வழங்கப்பட்டன. ‘யாரையும் கட்டாயப்படுத்தவில்லை’ என மிஷனரி குழுவைச் சேர்ந்த ரெபேக்கா கூறி னார். இந்த சம்பவம் குறித்து அகில பாரத கிறிஸ்டியன் மகாசபா கர்நாடக டிஜிபியிடம் புகார் அளித்துள்ளது.

இதில் ஏதாவது நியாயம் இருக்கிறதா?

“நாட்டின் மக்கள் தொகை 140 கோடியாக உள்ளது. ஆனால் நாட்டின் மொத்த செல் வத்தில் 50 சதவிகிதம் 100 பணக்காரர்களிடம் மட்டுமே உள்ளது. இதுதான் நரேந்திர மோடி யின் ஆட்சியில் இந்தியாவின் யதார்த்தம். இந்தியாவின் அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்தைப் பார்த்தால், 90 சதவிகித லாபம் 20 கார்ப்பரேட் நிறுவனங்களிடம் மட்டுமே உள்ளது. இந்த அரசாங்கம் இரண்டு இந்தியாவை உருவாக்கியுள்ளது. ஒரு இந்தியாவில் ஏழை மற்றும் எளிய மக்கள் வாழ்கிறார்கள். மற்றொரு இந்தியாவில் அனைத்து செல்வங்களும் கொண்ட 200-300 பேர் வாழ்கின்றனர். இதில் உங்களுக்கு நியாயம் இருப்பதாக தெரிகிறதா?” என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

அனைவரின் முன்னேற்றத்திற்காகவே சாதிவாரி கணக்கெடுப்பு!

பீகார் மாநிலத்தில், அரசு அறிவித்தபடி சனிக்கிழமை முதல் சாதிவாரி கணக்கெடுப்பு துவங்கி யுள்ளது. முதற்கட்டமாக ஜனவரி 7 முதல் ஜனவரி 21 வரையும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 30 வரையும் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் மாநிலத்தின் மக்கள் தொகை மட்டுமல்லாமல், சாதிவாரி பொருளாதார நிலை குறித்தும் அறிந்துகொள்ள முடியும். இதன்மூலம் பிற்படுத்தப்பட்டவர்களை அறிந்து அவர்களை மேம்படுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு கிடைக்கும். அனை வருக்கும் முன்னேற்றம் வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

ராமர் கோயில்: சம்பத் ராய் ‘முறையான’ அறிவிப்பு

2024 ஜனவரி 1-ஆம் தேதி ராமர் கோயில் திறக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா  கூறியிருந்தார். இதையொட்டி, அமித்ஷா உள்துறை அமைச்சரா, ராமர் கோயில் பூசாரியா?  தேதியை அறிவிக்க அவர் யார்? என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பினார். அறிவிப்பு வெளியிட ‘உரிமை’ படைத்த ராமர் கோயில் அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய், 2024 ஜனவரி 14-ஆம் தேதி மகர சங்கராந்தியன்று கோயில் கருவறையில் ராமர் சிலை நிறுவப்படுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று புதிய அறிவிப்பை வெளி யிட்டுள்ளார்.

இந்துத்துவா கொள்கையைத்தான் எதிர்க்கிறோம்..

“நான் ஒரு இந்து. நான் இந்துவாக இருக்கும்போது எப்படி இந்து விரோதியாக இருப்பேன். நான் இந்துத்துவா கொள்கையைத் தான் எதிர்க்கிறேன். நான் ஒருபோதும் ராமர் கோயில்  கட்டப்படுவதை எதிர்த்ததில்லை. கர்நாடகாவில் கிராமப்புறங்களில் நானே நிறைய ராமர் கோயில்களை கட்டியுள்ளேன். காங்கிரஸ் ஒருபோதும் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலை எதிர்த்ததில்லை. நாங்கள் ராமர் கோயிலை அரசியல் ஆதாயத்துக்காகவும் வேறு மதத்தின ருக்கு எதிராகவும் பயன்படுத்துவதைத்தான் எதிர்க்கிறோம்” என்று கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா பேசியுள்ளார்.

தடுப்பணைக்கு மோடியின் தாயார் பெயரை சூட்டிய குஜராத் அரசு!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென் மோடி தனது நூறாவது வயதில், கடந்த  டிசம்பர் 30 அன்று காலமானார். இந்நிலையில், குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் உள்ள  நயாரி ஆற்றின் குறுக்கே 400 அடி நீளம், 150 அடி அகலத்தில் கட்டப்படும் தடுப்பணைக்கு, பிரதமர் மோடியின் தாயார் நினைவாக ‘ஹீராபா ஸ்மிரிதி சரோவர்’ எனப் பெயர் சூட்டப் பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை கடந்த 4-ஆம் தேதி ராஜ்கோட் மேயர், உள்ளூர் எம்எல்ஏ முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இந்த தடுப்பணைப் பணியை ‘கிர் கங்கா பரிவார்’ என்ற அறக்கட்டளை மேற்கொள்கிறது.

ரூ.3000 இல்லாமல் தாயின் உடலை 40 கி.மீ. சுமந்த மகன்!

மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டம் கிராந்தி என்ற பகுதியைச் சேர்ந்தவர் ராம் பிரசாத்.  இவர், இறந்துபோன தனது 72 வயது தாயாரின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்வதற்கு  ஆம்புலன்ஸ் தேடியுள்ளார். அப்போது, 40 கி.மீ. செல்ல ஆம்புலன்சிற்கு ரூ. 3 ஆயிரம் செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், தன்னிடம் ரூ. 3 ஆயிரம் இல்லாததால், ராம் பிரசாத்,  தனது தாயின் உடலை, தோளில் போட்டுக்கொண்டு 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமந்து செல்லத் துவங்கியுள்ளார். சில கி.மீ. தூரம் அவர் சுமந்தே சென்றே நிலையில், தகவலறிந்து தொண்டு நிறுவனம் ஒன்று, அவருக்கு ஆம்புலன்ஸ் வழங்கி உதவியுள்ளது.

தமிழ்நாடு, தமிழர்களுக்கானது அல்லவாம்.. 

“ஆளுநர் ஆர்.என். ரவியை ஆதரிக்கிறோம். தமிழ்நாடு என்பது தமிழைத் தாய்மொழி யாக கொண்டவர்களுக்கு மட்டுமானது அல்ல. ஏனென்றால் இந்தியர்கள் அனை வருக்கும் ஒரே மரபணுதான் உள்ளது. திராவிடம் என்பது அதிகம் பயன்படுத்தப்பட்ட சமஸ்கிருத சொல். ஆரியப் புரட்டு பிரிட்டிஷ்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று” என்று பாஜக மூத்த தலை வர் சுப்பிரமணியசாமி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ரூ.10.5 லட்சம் லஞ்சப்பணம்: பாஜக அலறல்!

பெங்களூரு சட்டப்பேரவை வளாகமான விதான சவுதாவில் பொதுப்பணித்துறை பொறி யாளர் ஜெகதீஷ் என்பவரிடம் இருந்து கணக்கில் வராத ரூ. 10.5 லட்சம் பணம் பிடிபட்டது. ஜெகதீஷ் கைதும் செய்யப்பட்டார். இந்நிலையில் பாஜக-வைச் சேர்ந்த முதல்வர் பசவ ராஜ் பொம்மை, பொதுப்பணித்துறை அமைச்சர் சி.சி. பாட்டீல் ஆகிய இருவரில் ஒருவருக்கு லஞ்சம் கொடுப்பதற்காகவே இந்தப் பணம் கொண்டுவரப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலை யில், “எனக்கு கொடுப்பதற்காகவே ரூ. 10.5 லட்சம் எடுத்து வரப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது சரியல்ல. இது உண்மைக்கு புறம்பானது” என்று அமைச்சர் சி.சி. பாட்டீல் அலறியுள்ளார்.

டிஆர்எப் பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு!

பிஎப்ஐ அமைப்பின் துணை அமைப்புகளான, ரிஹாப் இந்தியா பவுண்டேஷன் (ஆர்ஐஎப்), கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா (CFI), அனைத்திந்திய இமாம் கவுன்சில், நேஷனல் கான்பெடரேஷன் ஆப் ஹியூமன் ரைட்ஸ் ஆர்கனிசேஷன்ஸ், நேஷனல் வுமன்’ஸ் பிரண்ட், ஜூனியர் பிரண்ட், எம்பவர் இந்தியா பவுண்டேஷன், ரஹப் பவுண்டேஷன் ஆகிய அமைப்பு களை 5 ஆண்டுகளுக்கு தடை செய்வதாக ஒன்றிய பாஜக அரசு அண்மையில் அறிவித்தது. இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த  லஷ்கர்-இ-தொய்பாவின் பினாமி அமைப்பு எனப்படும் டிஆர்எப் அமைப்பையும் உள்துறை அமைச்சகம் தடை செய்துள்ளது.

‘இது ஒரு கருத்தியல் யாத்திரை’

ஆர்எஸ்எஸ்-பாஜகவை கருத்தியல் ரீதியாக எதிர்த்துப் போராடுவதற்காகவே “இந்தியா ஒற்றுமை” யாத்திரை நடத்தப்படுகிறதே தவிர, 2024 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதற்காக அல்ல. இது ஒரு கருத்தியல் யாத்திரை. தனிநப ரின் யாத்திரை இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

அதிமுக - பாஜகவுக்கு பாமக கேள்வி 

கடலூர், ஜன.7 என்.எல்.சி.க்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து அதிமுக, பாஜக போராடாதது ஏன்? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அன்னூரில் 1,500 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து அதிமுக, பாஜக தலைவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். அன்னூர் விவசாயிகளுக்காக போராட்டம் நடத்திய அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனம்  விவசாயிகளிடமிருந்து நிலங்களை கையகப்படுத்த முயற்சிப் பதை எதிர்த்தும் அந்த விவசாயி களின் வாரிசுகளுக்கு நெய்வேலி அனல் மின்நிலையத்தில் வேலை  வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராடாதது ஏன்? எனவும் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜன.8 வரை இரவில் குளிர் நீடிக்கும் 

சென்னை, ஜன.7- சென்னை மற்றும் புறநகர் பகுதிக ளில் கடந்த சில தினங்களாக இரவிலும்,  அதிகாலையிலும் கடும் குளிர் நிலவி வருகிறது. அதே நேரத்தில் சில பகுதிகளில் கடந்த 2 தினங்களாக லேசான மழை யும் காணப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் ஜனவரி மத்தி வரை அதாவது 15-ந்தேதி வரை இரவில்  குளிர் நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து  உள்ளது. அதே நேரத்தில் மழை  முடிவுக்கு வருவதாகவும் தெரிவிக்கப் பட்டு உள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர்  பகுதியில் வானம் ஓரளவு மேகமூட்டத்து டன் இருக்கும் என்பதால் சில இடங்க ளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் 24-25 டிகிரி செல்சியஸ் வரை  இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறும் போது, ‘ஜனவரி நடுப்பகுதி யில் இமயமலையில் இருந்து குளிர்ந்த  காற்று தமிழகம் வரை நகர தொடங்கும். இது இரவு வெப்பநிலையை குறைக்க லாம். அடுத்த 4 நாட்களுக்கு லேசான  மழையை எதிர்பார்க்கலாம். அதன்  பிறகு வறண்ட வானிலை இருக்கலாம்’ என்றனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு கட்டணம் அறிவிப்பு

சென்னை, ஜன.7 12ஆம்  வகுப்பு பொதுத்தேர்வு எழுத  இருக்கும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு  அரசு தேர்வுகள் இயக்ககம் வெளி யிட்டுள்ளது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத  இருக்கும் மாணவர்களுக்கு செய் முறை தேர்வு அடங்கிய பாடத்திற்கு 225 ரூபாயும், செய்முறை இல்லாத பாடங்களுக்கு 175 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களில்  தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு  கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 11ஆம் வகுப்பு அரியர் தேர்வு எழுதும்  மாணவர்களுக்கு ஒரு பாடத்திற்கு 50 ரூபாய் என்றும் இதர கட்டணம் 35 ரூபா யும் செலுத்த வேண்டும் என்று கூறப் பட்டுள்ளது. சுயநிதி பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் வழியில் பயிலாத மாணவர்களிடம் தேர்வு கட்டணத்தை பெற வேண்டும். ஜன.20 மாலை 5 மணிக்குள் மாண வர்களிடமிருந்து தேர்வு கட்ட ணத்தை பெற்று http://www.dge1.tn.gov.in தேர்வுகள் துறை இணையதளத்தில் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேபாளம் : ஒற்றுமைக்கான புதிய முயற்சிகள்

காத்மண்டு, ஜன.7- நேபாளத்தில் திடீர் திருப்பமாக இடதுசாரிக் கட்சிகள் இணைந்து ஆட்சி யமைத்துள்ள நிலையில், ஒற்றுமைப் படுத்துவதற்கான புதிய முயற்சிகள் நடை பெற்று வருகின்றன. இடதுசாரிக் கட்சிகளுக்கிடையில் ஏற்பட்ட பிளவால், கே.பி.சர்மா ஓலி தலை மையிலான ஆட்சி கவிழ்ந்து, நாடாளு மன்றத்திற்கான புதிய தேர்தல் நடை பெற்றது. இந்தத் தேர்தலிலும் நேபாள காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மாவோ யிஸ்ட் மையம் மற்றும் ஐக்கிய சோசலிஸ்ட் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. இக்கட்சிக ளுக்கு அதிக இடங்கள் கிடைத்தாலும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் திடீர் திருப்பமாக நேபாள கம்யூனிஸ்ட்(ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனி னிஸ்ட்) கட்சியின் ஆதரவுடன் மாவோ யிஸ்ட் மையம் ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் அனைத்து இடது சாரிக் கட்சிகளையும் இணைத்து ஒற்று மைப்படுத்தும் பணிகள் தொடங்கி யுள்ளன. ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி நான்கு  பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. அனைத்து இடதுசாரிக் கட்சிகளுடனும் இக்குழு பேச்சுவார்த்தை நடத்தப் போகி றது. நடந்து முடிந்த தேர்தலில் பெரிதும் பாதிக்கப்பட்டது ஐக்கிய சோசலிஸ்ட்  கட்சியாகும். நேபாள கம்யூனிஸ்ட் (ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சி யில் இருந்து பிரிந்த ஐக்கிய சோசலிஸ்ட் கட்சிக்கு தேசியக் கட்சி அந்தஸ்து கிடைக்க வில்லை.  மறுபுறத்தில், தங்கள் கட்சியில் இருந்து விலகி சுயேச்சையாகப் போட்டி யிட்டு வென்ற நாடாளுமன்ற உறுப்பினர்க ளை மீண்டும் கட்சியில் சேர்க்க அனை த்துக் கட்சிகளுமே முனைந்துள்ளன. தற் போதுள்ள சூழலில் ஒவ்வொரு உறுப்பி னரும் முக்கியமான நபர்களாக மாறியுள்ள தால், தங்கள் எண்ணிக்கையை அதிக ரித்துக் கொள்வதில் கட்சிகள் ஆர்வமாக உள்ளன.