districts

விதிகளை மீறும் பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து

விருதுநகர், ஜன.7- பட்டாசு ஆலைகள் உரிய விதி முறைகளை கடைப்பிடிக்காமல் மீறி செயல்பட்டால் அதன் உரிமம் ரத்து செய்யப்படும் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறி யதாவது: விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு தயாரிக்கும் ஆலைகளில் கூடுதல் மாவட்ட வருவாய் அதிகாரியால் உரி மம் வழங்கப்பட்ட பட்டாசு ஆலை கள் மற்றும் கூடுதல் வெடிபொருள் கட்டுப் பாட்டு அலுவலரால் உரிமம் வழங்கப்பட்ட பட்டாசு ஆலைகள் அனைத்திலும், அரசு விதிமுறை களின்படி அவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு தடவை அளவு மற்றும் ஆண்டள விற்கு உட்பட்டு அனுமதி வழங்கப் பட்ட பட்டாசு மற்றும் இதர வெடி பொருட்களை மட்டுமே உற்பத்தி செய்யவோ, சேமித்து வைக்கவோ வேண்டும். உச்சநீதிமன்றம் தனது 29.10.2021-ஆம் தேதியிட்ட தீர்ப்பில் தெரிவித்துள்ளவாறு பேரியம் உப்பு கலந்து தயார் செய்யப்பட்ட பட்டா சுகள் மற்றும் சரவெடி போன்ற பட்டாசு களை தயாரிக்கவோ, சேமித்து வைக் கவோ, விற்பனை செய்யவோ கூடாது. வெண்கலம் , பித்தளை , கன்மெட்டல் மற்றும் மரக்கட்டைகளால் செய்யப் பட்ட உபகரணங்களை மட்டுமே பயன் படுத்த வேண்டும். ரசாயன பொருட்கள் உபயோகப் படுத்தப்படும் அனைத்து நேர்வுகளி லும் அரசு சான்றிதழ் பெற்ற போர் மென் முன்னிலையிலேயே பணிகள் நடைபெற வேண்டும். 18 வயதிற்கும் குறைவான பணியாளர்கள் எவரை யும் தொழிற்சாலைகளில் பணியில் அமர்த்தக்கூடாது. பட்டாசு தயாரிப் பில் பேரியம் உப்பு பயன்படுத்தப்படக் கூடாது. இடி-மின்னல் ஏற்படும் நேரங்க ளில் தொழிற்சாலையில் உற்பத்திப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும். தொழிற்சாலை கிட்டங்கிகளுக்கு அருகே பட்டாசுகளை சோதனை செய்யக்கூடாது. அனுமதிக்கப்பட்ட அறைகளுக்கும் கூடுதலாக அறை கள் இருக்கக் கூடாது. மருந்து கல வைகள் கொண்ட கொள்கலன்கள், பேக்கிங் செய்யப்பட்ட பட்டாசு பெட்டி கள் ஆகியவற்றை தரையில் இழுத்துச் செல்லவோ அல்லது தள்ளிச் செல் லவோ கூடாது. வெடி பொருட்களை தயார் செய்வதற்கான பணிகள் அவற்றிற் கென நிர்ணயிக்கப்பட்ட அனுமதிக்கப் பட்ட அறைகளை தவிர்த்து பிற பகுதி களில் செய்யக்கூடாது. அனுமதிக்கப்பட்ட அளவுகளை மீறி அணுகுண்டு போன்ற வெடிகளை தயாரித்தல் கூடாது. அறைகளுக்கு இடையே வெளிப்புறங்களில் பட்டாசு களை தயாரித்தல், சேமித்து வைத்தல் கூடாது. தொழிற்சாலையின் உற்பத்தி அறைகளில் அனுமதிக்கப்பட்ட அள விற்கு அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிய அனுமதிக்கக்கூடாது. தொழிற்சாலையினை குத்தகைக்கு விடக்கூடாது அல்லது குத்தகை பணி யாளர்களை பணியில் அமர்த்துதல் கூடாது. சிறுகற்களை கொண்ட வெங்காய வெடி போன்றவை தயாரித்தல் கூடாது. மாவட்ட நிர்வாகத்தால் பட்டாசு உற் பத்தி ஆலைகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள ஆய்வுக் குழுக்களின் ஆய்வின்போது ஏதே னும் விதிமீறல்கள் கண்டறியப்பட் டால் தொடர்புடைய பட்டாசு தொழிற் சாலைக்கு வழங்கப்பட்ட உரிமம் எந்த விதமான முன்னறிவிப்புமின்றி நிரந்தர மாக ரத்து செய்யப்படும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள் ளார்.