சென்னை, மார்ச் 21- அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜய பாஸ்கரின் சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூ ரில் உள்ள அவரது வீட் டில் அமலாக்கத் துறை யினர் வியாழனன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். பாஜக-வுடன் வெளிப்படையான கூட்டணிக்கு மறுத்து விட்ட அதிமுக, புதனன்று தனது முதற்கட்ட வேட்பாளர்களை பட்டியலை அறிவித்தது. மார்ச் 24 முதல் அக்கட்சி யின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனி சாமி பிரச்சாரத்தையும் துவங்குவதாக அறிவித்தார். இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரைக் குறிவைத்து, வியாழனன்று அமலாக்கத்துறை சோத னையில் இறங்கியுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு செங்குன் றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா கிடங்கில் வரு மான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஒரு டைரி யையும் பறிமுதல் செய்தனர். இதன் அடிப்படையிலேயே தற் போது சோதனை நடத்தப்படுவதாக தக வல்கள் வெளியாகியுள்ளன.