.மதுரை, ஜூன் 5- மதுரை மாநகராட்சியின் அலட்சி யத்தால் மனித உயிர்கள் பலியாவது தொடர் கிறது. 42 தினங்களுக்குள் நான்கு பேர் பலி யாகியுள்ளனர். பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காதது. மாநகராட்சி அதிகாரிகள் பணி யிடத்தில் இல்லாமல் போவது போன்றவை தான் உயிரிழப்புகளுக்கு காரணமாக உள் ளது. தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது, மாநகராட்சி நிர்வாகம் பணியிடத்திலிருந்து கண்கா ணிப்பது ஆகியவற்றை மேற்கொண்டு எதிர்காலத்தில் மனித உயிர்கள் பலியா வதை தடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்தி ரன் ஆகியோர் சனிக்கிழமை விடுத்துள்ள அறிக்கை:- மதுரை புதுவிளாங்குடி ராமமூர்த்தி நகரில் ஈரோடு மாவட்டம் அமராவதி நகரைச் சேர்ந்த வீரணன் என்ற சதீஷ் (34) மதுரை மாநகராட்சி மேற்கொண்டு வரும் பாதாளச் சாக்கடைப் பணியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மர ணத்தை யாரும் எதிர்பார்த்திருக்க மாட் டார்கள். ஆனால் உயிரிழந்த விதம் தான் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள நூற்றுக்க ணக்கான தொழிலாளர்களை அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது. இந்தப் பகுதியில் சுமார் 13 அடி முதல் 15 அடி ஆழத்திற்கு தோண்டி தொட்டிகள் இறக்கப்பட்டு தொட்டிகள் பைப்புகள் மூலம் ஒன்றோடொன்று இணைக்கப்படுகின்றன.
13 அடி ஆழத்தில் சதீஷ் பணியாற்றிக் கொண்டிருந்த போது மண் சரிந்துள்ளது. மண் சதீஷை மூடியதால் பொக்லைன் ஆப்பரேட்டர் மேல்பகுதியில் உள்ள மண்ணை லாகவகமாக அகற்றினால் விரை வில் அவரை மீட்டு விடலாம் என யோசித்து பொக்லைன் இயந்திரத்தின் துடுப்பை இரண்டாவது முறையாக கீழே இறக்கும் போது சதீஷின் தலை தனியாக வந்துள் ளது. பணி நடைபெறும் இடத்தில் மாநகராட்சி அதிகாரிகள் இருக்க வேண்டுமென்பது விதி. ஆனால் இந்த விதி மீறப்பட்டுள்ளது. பாதாளச்சாக்கடை பணியின் போது ஒவ்வொரு பகுதியிலும் மண்ணின் தன்மை ஒவ்வொரு விதமாக இருக்கும் என்பது ஒன்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கோ, ஒப்பந்ததாரருக்கோ தெரியாத விஷயமோ அல்லது புதிய விஷயமோ அல்ல. விளாங் குடி பகுதி தளர்வான மண்ணின் தன்மை கொண்டது (Loose Soil). அள்ளப்படும் மணல் குழிகளின் அருகி லேயே குவிக்கப்படுகிறது. மணல் குழிக்குள் சரிவதைத் தடுக்க மரத்திலான தடுப்பு களை அமைக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு பெல்ட், கயிறு கள், கையுறைகள் சிறிய ஆக்சிஜன் உரு ளைகள், முகக்கவசங்கள், பாதுகாப்பு உப கரணங்கள் வழங்கப்படவில்லை.
தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவது ஒப்பந்ததாரரின் கடமைகளில் ஒன்று என மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர். இது தொடர்பாக தொழிலாளர்கள் புகார் அளித்தால், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என மிகச் சாதார ணமாகக் கூறுகின்றனர். மாநகராட்சியின் கடும் எச்சரிக்கைக்குப் பின்னர் ஒப்பந்ததாரர்கள் பாதுகாப்பு உப கரணங்கள் வைத்துள்ளதாகக் கூறினாலும் அவற்றை யாராவது திருடிச் சென்றுவிடு வார்கள் எனக் கூறி தொழிலாளர்களுக்கு வழங்குவதில்லை. 45 நாட்களுக்குள் மதுரை மாநகராட்சி யில் பணிபுரியும் தொழிலாளர்கள் உயிரி ழப்பது இரண்டாவது முறை. கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி பழங்காநத்தம் நேரு நகரில் உள்ள கழிவுநீர் கிணற்றில் மின் மோட்டாரை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த னர். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் அவர்களாகவே போய் மலக்குழிக்குள் இறங்கி இறந்துவிட்டார்கள் என போகிற போக்கில் பேசப்பட்டது. கடந்த காலங்களில் பாதாளச்சாக்கடை குழியில் இறங்கி மர ணித்தவர்கள் குடிபோதையில் இறங்கி மர ணித்தார்கள் என்று மரணங்கள் உதா சீனப்படுத்தப்படுகின்றன
சம்பளப் பிரச்சனை
மதுரை மாநகராட்சியில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் காலியான வவுச்சரில் தான் கையெழுத்திடுகின்றனர். இவர்களுக்கு ஈஎஸ்ஐ உள்ளிட்ட எந்த மருத்துவசதியும் இல்லை என்ற புகாரும் உள்ளது. தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது, மாநகராட்சி நிர்வாகம் பணியிடத்திலிருந்து கண்கா ணிப்பது ஆகியவற்றை மேற்கொண்டு எதிர்காலத்தில் மனித உயிர்கள் பலியா வதை தடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.