districts

img

காலை உணவுத் திட்டம்: நாடாளுமன்றக்குழு வரவேற்பு

மதுரை, ஆக.31- தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டா லின் அறிமுகப்படுத்தியுள்ள காலை உணவுத்திட்டத்தை “தின மலர்” நாளேடு இழிவுபடுத்தியுள் ளது. இந்த நிலையில் ஊரக வளர்ச்சி  மற்றும் பஞ்சாயத்து ராஜ் நாடாளு மன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் குழு புதனன்று காலை உணவுத் திட்டத்தை வரவேற்றுள்ளது. தூத்துக்குடி மக்களவை உறுப்  பினர் கனிமொழி கருணாநிதி தலை மையிலான நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினர்கள் மதுரையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட செயலாக்கத்தைப் பார்வை யிட்டனர். மதுரை நெல்பேட்டை, சாத்த மங்கலம் பகுதிகளில் உள்ள பள்ளி யின் சமையலறையை கனிமொழி கருணாநிதி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பி னர்கள் ஆய்வு செய்தது. அவர்களி டம் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்  கீதா, மாநகராட்சி ஆணையர் கே.ஜே.பிரவீன்குமார், மேயர் இந்திராணி ஆகியோர் காலை உண வுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் திங்கள் முதல் வெள்ளி  வரை தினம்தோறும் குழந்தை களுக்கு வழங்கப்படும் உணவுகள்  பயனடையும் குழந்தைகளின் எண்  ணிக்கை குறித்தும் விளக்கினர். தொடர்ந்து நாடாளுமன்றக் குழு சில மாணவர்களுடன் கலந்து ரையாடியதோடு, குழந்தை களுக்கு வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டனர். காலை 8.15 மணி முதல் 8.30 மணி வரை காலை உணவு வழங்கப்பட்டதைத் தொட ர்ந்து காலை வணக்கத்தில் கலந்து கொண்டதாக மாணவர்கள் நாடா ளுமன்றக்குழுவிடம் தெரிவித்த னர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி மற்றும் ஷியாம் சிங் யாதவ், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மாநகராட்சி மற்  றும் அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க உதவியுள்ளது. பெரும்பான்மையான மாண வர்கள் பொருளாதாரத்தில் பின்  தங்கிய சமூகப் பிரிவைச் சேர்ந்த வர்கள் என்பதால், அவர்களுக்கு காலை உணவுத் திட்டம் ஒரு ஆசீர் வாதமாக (வரப்பிரசாதமாக) வந் துள்ளது. குழந்தைகள் பள்ளிக்கு வரு வதை ஊக்குவிக்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுகிறது. எந்தவொரு குழந்தையையும் வெறும் வயிற்றில் படிக்க வைக் கக்கூடாது என்பதே இந்தத் திட்  டத்தின் நோக்கமாகும். அப்படிச் செய்தால் பள்ளிச் சூழல் அவர் களுக்கு விரோதமாக மாறலாம். பின்தங்கிய குடும்பங்களைச்  சேர்ந்த மாணவர்கள் அவர்கள் வள ரும் பருவத்திலேயே நல்ல சூழலில் வளர வேண்டும் என தமிழ்நாடு அரசு விரும்புகிறது என்றனர்.