districts

img

மாணவர்களுக்கான காலை சிற்றுண்டியில் சிறுதானிய உணவு வகைகள்

விருதுநகர், அக்.16- விருதுநகர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவ,  மாணவிகளுக்கு வழங்கப்படும் காலைச் சிற்றுண்டி யில் சுவையான சிறுதானிய உணவு வகைகள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்தார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை சார்பில் உலக உணவு தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது, தங்களது அன்றாட உணவிற்கான தேவையை பூர்த்தி செய்வதிலேயே பல ஆண்டுகளை ஆதி மனி தர்கள் கழித்துள்ளனர். ஆதி மனிதன் விவசாயம் செய்  வதை கண்டுபிடித்த பின்பு தான் பல நாடுகளுக்கு மனிதர்கள் சென்றுள்ளனர். இல்லாவிட்டால் அனை வரும் ஆப்பிரிக்கா கண்டத்தில் தான் இருந்திருப்பார் கள். விவசாயப் புரட்சி நடைபெற்ற பின்பு தான், உல கில் பல புதிய புதிய கண்டுபிடிப்புகள் உருவாகின. இந்திய நாட்டின் முதல் பிரதரமராக பண்டித ஜவ ஹர்லால் நேரு பொறுப்பேற்ற போது, இந்தியாவில் உள்ள விவசாயத்திற்கு அதிக அளவில் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தெரிவித்தார். ஏனென்  றால், விவசாயம் நன்றாக இருந்தால் தான் நாட்டில் வாழும் மக்கள் உண்ண உணவு கிடைக்கும். முதலில்  மக்கள் வாழ வழிவகை செய்ய வேண்டும் என தெரி வித்துள்ளார். மேலும், சாலைகளோ, தொழிற்சாலை களோ பின்பு அமைத்துக் கொள்ளலாம். மக்கள் பசியாற உண்டு உயிருடன் இருந்தால் தான் பிற துறை களில் நாம் சாதிக்க முடியும் என பிரதமர் நேரு அக்காலத்திலேயே கூறியதை நான் புத்தகத்தில் படித்துள்ளேன்.

மேலும், நான் உண்ணும் உணவானது, வெறும் பசியை மட்டுமே போக்குவதாக இருத்தல் கூடாது. அது ஊட்டச் சத்து மிக்கதாகவும் இருக்க வேண்டும். தமிழகத்தில் விருதுநகர் மற்றும் தர்மபுரி ஆகிய இரு மாவட்டங்கள் மட்டும் சிறுதானியங்களை அதிக  அளவில் உற்பத்தி செய்திட தேர்வு செய்யப்பட்டுள் ளது. மேலும், தரிசாக உள்ள 3 ஆயிரம் ஏக்கர் நிலங்க ளில் விவசாயம் செய்திடவும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விருதுநகர் மாவட்டத்தில் காலைச் சிற்றுண்டி வழங்கப்படுகிறது. அந்த உணவை தேர்வு செய்யும் முடிவு மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, நமது மாவட்டத்தில் காலைச் சிற்றுண்டி களில் சிறு தானியங்களை பயன்படுத்தி தயார் செய்  யும் உணவு வகைகளை பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கலாம். சிறுதானியங்கள் மூலம் சுவையான உணவை பல அமைப்புகள் தயார் செய்து வரு கின்றன. நானும் விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவன். எனது தந்தை ஒரு விவசாயி. நான் படிக்கும் காலத்தில் சோளத்தில் தயார் செய்யப்பட்ட ரொட்டி தான் முக்கிய உணவு. இப்போது நாம் உண்ணும் உணவுகள் சுவைக்காக மட்டுமே பயன்படுகிறது. ஊட்டச் சத்து அதில் இல்லை. எனவே சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது என தெரிவித்தார். முன்னதாக, சிறுதானியங்களை, பூச்சிக் கொல்லி மருந்து, உரங்கள் இன்றி உற்பத்தி செய்யும் கத்தாளம்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் விளக்க மளித்து பேசினார். இதேபோல், சிறுதானியங்கள் மூலம் பொங்கல், புட்டு, ஐஸ்கிரீம், பால் ஆகியவற்றை தயார் செய்து வழங்கும் முறை குறித்து சிவகாசி யைச் சேர்ந்த பெண் ஒருவர் விளக்கிப் பேசினார். மேலும் இதில், மாவட்ட திட்ட இயக்குநர் பி.திலக வதி, வேளாண்மை இணை இயக்குநர் ச.உத்தண்ட ராமன், நேர்முக உதவியாளர் சங்கர்.எஸ்.நாராய ணன், விதை ஆய்வு துணை இயக்குநர் க.விஜயா, வேளாண் செயற்பொறியாளர் டேனிஸ்டன் ஆகி யோர் உட்பட பலர் பங்கேற்றனர்.