ஊராட்சி தலைவரின் நிதி முறைகேட்டிற்கு கண்டனம் சிலமலையில் கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு
தேனி, நவ.1- போடி ஒன்றியம் ,சிலமலை ஊராட்சி தலைவரின் நிதி முறைகேடு தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் நவம்பர் 1 செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து பொது மக்கள் வெளிநடப்பு செய்தனர். தேனி மாவட்டம், போடி ஒன்றியம் ,சிலமலை ஊராட்சி யில் செவ்வாய்க்கிழமை கிராம சபை கூட்டம் அறிவிக்கப் பட்டது கூட்டத்திற்கு வருகை தந்த பொதுமக்கள் கிராம ஊராட்சியில் திட்டப்பணிகள் எதையுமே சரிவர செய்ய வில்லை என்றும், ஊராட்சியில் நிதியை தவறான முறை யில் ஊராட்சி நிர்வாகம் கையாடல் செய்துள்ளது தொடர் பாக பல கிராம சபை கூட்டங்களில் புகார் தெரிவித்தும் ஊராட்சி மன்ற தலைவர் மீது மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி கிராம மக்கள் நடக்க விருந்த கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து வெளியேறி னர். மாவட்ட நிர்வாகம் இதற்கு பிறகாவது ஊராட்சியில் நடக்கும் நிதி முறைகேட்டையும் பஞ்சாயத்தையும் தலை வரையும் நடவடிக்கைக்கு உள்ளாக்க வேண்டும் என்று 1 ஆவது வார்டு உறுப்பினர் ஆர்.தங்கப்பாண்டி கேட்டுக் கொண்டுள்ளார்.
வாரம் ஒருமுறை குடிநீர் விநியோகிக்கும் அவலம் புலிக்குத்தியில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்
தேனி, நவ.1- முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகை யில், புலிக்குத்தி ஊராட்சிக்கு தனியாக குழாய் பதித்து தண்ணீர் விநியோகிக்கப்படும் நிலையில் வாரம் ஒரு முறை குடிநீர் வழங்கப்படும் அவல நிலையை கண்டித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . தேனி மாவட்டம், புலிக்குத்தி ஊராட்சியில் சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர்கள் ஆர்.பி.அய்யப்பசாமி, எல்.செல்வராஜ் ஆகியோர் தலை மை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி .வெங்கடேசன் கண்டன உரையாற்றினார் .ஒன்றியச் செய லாளர் கே.எஸ் ஆறுமுகம், விவசாயத்தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் எல்.ஆர் .சங்கரசுப்பு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பி.ஜெயராஜ்,எம் .மணிகண்டன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கல்லூரி மாணவன் தற்கொலை
கடமலைக்குண்டு, நவ.1- தேனி மாவட்டம், கண்டமனூர் அருகே அம்பாசமுத்திரம் கிரா மத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவரின் மகன் நித்திஷ்குமார் (வயது 18). இவர் ஆண்டிபட்டி அருகே தனியார் பொறியியல் கல்லூரி யில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நித்திஷ்குமார் தேனி பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலை யில் நித்திஷ்குமார் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.
நிதி நிறுவன ஊழியர் தற்கொலை
வேடசந்தூர் , நவ.1- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு அருகே உள்ள ஒத்தப்பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி என்பவரின் மகன் முத்துக்கிருஷ்ணன்(வயது 26) ,இவர் எரியோட்டில் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். முத்துக்கிருஷ்ணன் தனது வீட்டில் சேலையால் விட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து எரியோடு காவல் ஆய்வாளர் சத்திய பிரபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதிய கலை-அறிவியல் கல்லூரி கட்டுமானப்பணி துவக்கம்
திருவில்லிபுத்தூர்,நவ.1- விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் பிள்ளை யார்குளம் கிராமத்தில் ரூ.11.33 கோடி மதிப்பில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடம் கட்டும் பணி களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி தலைமையில், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் முன்னிலையில், வருவாய் -பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அக்டோபர் 31 அன்று அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். திருவில்லிபுத்தூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, சி.எம்.எஸ் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இந்த புதிய கலை மற்றும் அரசு கல்லூரி அமைவ தால், உயர்கல்விக்கு செல்லும் இப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த ஏழை எளிய மாணவ, மாணவியர்கள் பயன்பெறு வார்கள் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரன் தெரிவித்தார்;. இந்நிகழ்ச்சியில், மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் பொன்முத்துராமலிங்கம், சிவகாசி வரு வாய் கோட்டாட்சியர்(பொ) அனிதா, திருவில்லிபுத்தூர் நகர் மன்ற தலைவர் ரவிக்கண்ணன், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் கு.ஆறுமுகம், வத்தி ராயிருப்பு ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சிந்துமுரு கன், கல்லூரி முதல்வர் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உசிலம்பட்டி அருகே கோர விபத்து- இருவர் பலி
மதுரை,நவ.1- மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செட்டிய பட்டி எனும் இடத்தில் மதுரையிலிருந்து போடி நோக்கி சென்ற அரசு பேருந்து, எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த சோழவந்தானை அடுத்துள்ள திருவாலவாயநல்லூரைச் சேர்ந்தவர்கள் கார்த்திக் மற்றும் சிங்கராஜ். கார்த்திக் என்பவருக்கு காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக சிங்கராஜூ டன் இருசக்கர வாகனத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள சின்ன ஓவுளாபுரம் கிராமத்திற்கு சென்று கட்டு போட்டு விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது நிகழ்ந்த விபத்தில் இருவரும் தலை சிதறி சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர். உசிலம்பட்டி தாலுகா காவல்துறையினர் இருவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிறந்த 80 நாளில் பெண் சிசு உயிரிழப்பு
மதுரை, செப்.1- மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கோவி லாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிவராஜா - கருப்பாயி. இந்த தம்பதிக்கு 5 மற்றும் 3 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 80 நாட்களுக்கு முன்பு உசி லம்பட்டி அரசு மருத்துவமனையில் இந்த தம்பதிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தை பிறந்துள் ளது. இந்த குழந்தைகளுக்கு ராமன் - லெட்சுமி என பெயர் சூட்டியுள்ளனர்., இதில் ஆண் குழந்தைக்கு பால் குடிப்ப தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த அக்டோபர் 12ஆம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் பெண்குழந்தைக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு கடந்த 18ஆம் தேதி மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படு கிறது. கடந்த 23ஆம் தேதி இரு குழந்தைகளுக்கும் சிகிச்சை முடிந்து நல்ல நிலையில் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டன. இந்நிலையில் திங்களன்று இரவு பெண் குழந்தை பால் குடிக்க முடியாமல் மூச்சு திணறல் ஏற்பட்டு அவதியுற்ற சூழலில் 108 ஆம்புலன்ஸ் மூலம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் குழந்தை பரி தாபமாக உயிரிழந்தது. விரைந்து வந்த வாலாந்தூர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் பெண் குழந்தை உயிரிழப்பு தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எரியோட்டில் 9 பைக்குகளை தீ வைத்து எரித்த நபர் கைது
வேடசந்தூர், நவ.1- வேடசந்தூர் அருகே எரியோட்டில் 9 மோட்டார் சைக் கிள்களுக்கு அடுத்தடுத்து நள்விரவில் தீ வைத்து எரித்த மதுபோதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எரியோட்டில் மின்சார வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வரும் சேகர், துரைச்சாமிநாடார் தெருவைச் சேர்ந்ட் பூண்டு வியாபாரி கோபால், துரைச்சாமிநாடார் தெருவில் வசித்து வரும் மதுரை தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணி யாற்றி வரும் கார்த்திக், கரூர் சாலையில் வசித்துவரும் வேன் ஓட்டுநர் ராஜா, தென்னம்பட்டி அரசு மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் சவுந்திரராஜன், நடுத்தெருவைச் சேர்ந்த வியாபாரி சின்ராஜ், பாண்டியன் நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மணிகண்டன் எரி யோடு வடக்கு தெருவில் வசிக்கும் சக்திவேல் ஆகியோ ரின் மோட்டார் சைக்கிள்களை மர்மநபர் தீ வைத்து எரித்துள்ளார். அப்பகுதியில் கடைகளில் வைத்துள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தபோது தீ வைத்த வர் உருவம் எதுவும் பதிவாகவில்லை. சந்தேகப்படும்படி நள்ளிரவு நேரத்தில் சம்பவ இடத் தில் நடமாடிய நபர் எரியோடு துரைச்சாமிநாடார் தெரு வைச் சேர்ந்த குமரேசன் என்பவரின் மகன் தச்சுதொழி லாளி மணிகண்டன் (வயது 30) என்பது தெரிந்தது. அவரை எரியோடு காவல் ஆய்வாளர் சத்தியபிரபா தலைமையி லான தனிப்படையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வேலைக்கு சென்று கிடைத்த பணத்தைகொண்டு இரவு மதுவாங்கி குடித்துவிட்டு துரைச்சாமிநாடார் தெருவில் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்கள், மொபெட்டுக்களுக்கு தீவைத்துவிட்டு தப்பிச்சென்று வீட்டிற்கு வந்து ஒன்றுமே நடக்காதுபோல தூங்கிவிடு வேன். மது போதையில் என்ன செய்கிறேன் என்று எனக்கே தெரியாது என்று போலீஸ் வாக்மூலத்தில் மணிகண்டன் தெரிவித்துள்ளார். இதையடுத்து எரியோடு போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.
தேவாரத்தில் மதுவுக்கு அடிமையாகி அத்தையைக் கொன்ற சிறுவன் கைது
தேனி, நவ.1- தேனி மாவட்டம், தேவாரம் அருகேயுள்ள டி.மீனாட்சி புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் வெள்ளையன் மகள் அழகம்மாள் (65). இவரது தம்பி கணேசன் மகன்கள் மணி கண்டன் (25) மற்றும் 17 வயது சிறுவன். கணேசன் இறந்து விட்டார். கணேசனின் மனைவி கேரளத்துக்கு வேலைக்கு சென்றுவிட்டார். அழகம்மாளுக்கு திருமணம் ஆகாத தால் மணிகண்டன், விக்ரம் ஆகியோரை அழகம்மாள் வளர்த்து வந்தார். அழகம்மாள் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்த நிலையில் அவருடன் மணிகண்டன்,17 வயது சிறுவன் ஆகியோரையும் ஆடு மேய்க்க அழைத்துச் செல் வது வழக்கம். இதில் 17 வயது சிறுவன் மதுப் பழக்கத்திற்கு அடிமை யாகி தினமும் மது அருந்தி வந்துள்ளார். இதனை தெரிந்து கொண்ட அழகம்மாள் கண்டித்துள்ளார். அங்கிருந்த சிலர் தான் அத்தையிடம் மது அருந்துவதை சொல்கிறார்கள் என நினைத்து அவர்களிடம் அந்த சிறுவன் சண்டை போட்டுள்ளார். இதனை விலக்கிவிட்டு அழகம்மாள் ,சிறு வனை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். இரவு உண வருந்திய பின் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த சிறு வன், தூங்கிக் கொண்டிருந்த அழகம்மாளை உருட்டுக் கட்டையால் தலை, முகம் ஆகிய இடங்களில் சரமாரியாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுத்தை உயிரிழந்த வழக்கில் தேனி எம்பி.ரவீந்திரநாத் ஆஜராகவில்லை விளக்க கடிதம் கொடுத்த வழக்கறிஞர்கள்
தேனி, நவ.1- தேனி அதிமுக மக்களவை உறுப்பினர் ப.ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டத் தில் சிறுத்தை உயிரிழந்த வழக்கில் ,அவ ருக்கு தொடர்பில்லை. விசாரணையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என ரவீந்திரநாத் தின் வழக்கறிஞர்கள் வனத்துறையினரிடம் விளக்கக்கடிதத்தை அளித்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாச பட்டி அருகே சொர்க்கவனம் பகுதியில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி சிறுத்தை ஒன்று மின்வேலியில் சிக்கியது. வனத்துறையினர் அவற்றை மீட்க முயன்றபோது உதவி வன பாதுகாப்பு அலுவலர் மகேந்திரனை கடித்து விட்டு தப்பியோடியது.இந்நிலையில் மக்க ளவை உறுப்பினர் ப.ரவீந்திரநாத் தோட்டத் தில் மறுநாள் இந்த சிறுத்தை வாயில் இருந்து ரத்தம் வெளியேறிய நிலையில் இறந்து கிடந்தது. வனத்துறையினர் சிறுத்தையை பிரேத பரிசோதனை செய்து வனப்பகுதி யில் புதைத்தனர். இது குறித்து வனஉயிரின ஆர்வலர்கள் சந்தேகங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து எம்பி.தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைத்து ஆடு வளர்த்த அலெக்ஸ்பாண்டியனை வனத்துறையினர் கைது செய்தனர்.கால்நடை வளர்ப்போர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் எம்பி. தோட்டத்து மேலாளர்கள் ராஜவேல், தங்க வேல் ஆகியோரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.இருப்பினும் அலெக்ஸ் பாண்டியன் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். எம்பி.ரவீந்திரநாத் மீது இது குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று கால்நடை வளர்ப்போர் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். எம்.பி.க்கு சம்மன் இதனைத் தொடர்ந்து வனத்துறை சார்பில் எம்பி.ரவீந்திரநாத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டது.செவ்வாய்க்கிழமை ரவீந்திரநாத் எம்.பி விசாரணைக்கு ஆஜராக இருந்த நிலையில் அவர் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் நேரில் வந்து வனத்துறையினரிடம் விளக்கக் கடிதத்தை அளித்தனர்.வழக்கறிஞர்கள் சுப்புரத்தினம், ராஜலட்சுமி, பிரகாஷ் குமார், ரத்னகுமார் உள்ளிட்ட வழக்கறிஞர் குழுவுடன் வந்த வழக்கறிஞர் சந்திரசேகரன் தேனி வனச்சர கர் அலுவலகத்தில் மாவட்ட உதவி வனப் பாதுகாவலர் ஷர்மிலியிடம் விளக்க கடி தத்தை வழங்கினார். இது குறித்து ரவீந்திரநாத் எம்.பி.யின் வழக்கறிஞர் சந்திரசேகரன் கூறுகையில், புதுதில்லியில் நீர்வளத்துறை, நதி மேம் பாட்டு கங்கை புத்துயிர் மற்றும் ஜல்சக்தி அமைச்சகத்தின் சார்பில் 7-வது இந்திய நீர்வார விழா நடைபெறுகிறது. இதில் பங் கேற்க மக்களவை உறுப்பினர் ப.ரவீந்திர நாத் புதுதில்லி சென்றுள்ளார். அதனால் அவரால் ஆஜராக முடிய வில்லை. சிறுத்தை உயிரிழப்புக்கும் ரவீந்திர நாத் எம்.பிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. எனவே அவரை விசாரணையில் இருந்து வனத்துறையினர் விடுவிக்க வேண்டும். மேலும் சிறுத்தை மரணத்தில் உண்மை குற்ற வாளிகளை வனத்துறையினர் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி னார். மாற்றம் இந்நிலையில் சிறுத்தை தாக்கிய உதவி வன பாதுகாப்பு அலுவலர் மகேந்திரன் காத்தி ருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இவருக் குப் பதிலாக ஷர்மிலி என்பவர் பொறுப்பேற்றார்.